Skip to main content

பட்டியலின இளைஞரின் திருமணம்; பெற்றோராக இருந்து சீர்வரிசை வழங்கிய ஊர் மக்கள்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

salem mettur mayilsamy marriage function participated all village people 
மாதிரி படம்

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சந்தைதானம்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது 27). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டனர். இந்நிலையில் மயில்சாமியின் திருமணம், கூழையூர் காட்டுவலவில் உள்ள செங்கார் பூசாரிக்காடு கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று (மே 4, 2023) நடைபெற்றது.

 

இந்நிலையில் பெற்றோரை இழந்த மயில்சாமிக்கு, கூழையூர் மற்றும் சந்தைதானம்பட்டி பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் உள்ளிட்ட இதர சமுதாய மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (02.05.2023) மேளதாளம் முழங்க, சீர்வரிசை தட்டுகளுடன் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். மணமகளுக்கு ஒரு பவுன் தாலி, மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி, மணப்பெண்ணுக்கு பட்டு சேலை உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களைக் கொண்டு சென்றனர். மேலும் புது பானை, சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை ஆகியவற்றையும் சீர்வரிசையாகக் கொடுத்தனர்.

 

சாதி வன்கொடுமை புகார்கள் பரவலாக கிளம்பினாலும், சாதி கடந்து ஊர் மக்களின் அன்பைப் பெற்ற, பெற்றோரை இழந்த பட்டியல் சமூக இளைஞரின் திருமணத்தை ஊர் மக்களே ஒன்று கூடி சொந்த வீட்டுத் திருமணம் போல சீர்வரிசை பொருட்களுடன் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து இருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சீர்வரிசை ஊர்வல நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ராஜா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.