Skip to main content

தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; 3 ஆசிரியர்கள் கேரளாவில் பதுங்கல்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

salem in incident

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி மாதேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனோகரன் பெற்றோருடன் உள்ளார். மற்ற இரு மகன்களும் வெளிநாட்டில் உள்ளனர்.

 

வீரகனூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நவீனன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மாதேஸ்வரிக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருந்தனர். இதற்கிடையே, வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கித் தருமாறு மாதேஸ்வரி அவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்பேரில் ஆசிரியர்கள் நவீனன், தமிழ்ச்செல்வி, அவர்களுடன் பணியாற்றி வரும் மற்றொரு ஆசிரியர் சங்கர் ஆகியோர் வங்கியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, வங்கியில் கடன் பெற்றுக் கொடுத்ததற்காக சொத்து உத்தரவாதம் வேண்டும் என்று கூறி, மாதேஸ்வரிக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன் பெயருக்கு மாற்றி பதிவு செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. கடன் அசல், வட்டி ஆகியவற்றை முறையாகச் செலுத்தி வந்த பிறகும் தன் வீட்டை, ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதால், மாதேஸ்வரி விரக்தி அடைந்தார்.

 

தன்னுடைய வீட்டை மீண்டும் தன் பெயருக்கே மாற்றிக் கொடுத்து விடுமாறு பலமுறை அவர்களிடம் கேட்டுப் பார்த்தும் ஆசிரியர்கள் இறங்கி வரவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர்கள் நவீனன், தமிழ்ச்செல்வி, சங்கர் ஆகியோர் மீது வீரகனூர் போலீசார் மாதேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, வங்கிக் கடனை மாதேஸ்வரி சரியாக செலுத்தவில்லை என்றும், கடனை செலுத்துமாறு கூறியபோதும் அவர் மறுத்ததால் அதற்கு உத்தரவாதமாக மாதேஸ்வரியை வீட்டை எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

 

இந்த மேலோட்டமான விசாரணையோடு நின்றுகொண்ட போலீசார், அவர்களைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு வந்ததால், வேதனை அடைந்த பெரியசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

 

கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தின் பின்னணியில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் விசுவரூபம் எடுத்தது.

 

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினர். பணி நேரத்தில் வட்டித்தொழில் செய்து வந்ததாலும், அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாலும் உடனடியாக மூன்று ஆசிரியர்களையும் பள்ளிக்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகே போலீசாரும் உஷார் ஆனார்கள். விவகாரம் வேறு திசையில் பயணிப்பதை உணர்ந்த அவர்கள், ஆசிரியர்களைக் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் கேரளா மாநிலத்திற்குச் சென்று பதுங்கி விட்டதாக தெரிகிறது.

 

இதுகுறித்து வீரகனூர் காவல் ஆய்வாளர் முருகனிடம் கேட்டபோது, ''மாதேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தோம். 3 ஆசிரியர்களுக்கும் முன்ஜாமின் கொடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் எதிர்மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். இந்நிலையில்தான் அவர்கள் கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.