Skip to main content

சிறுமி ஆணவக் கொலையா? சேலம் அருகே பயங்கரம்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Salem girl child passed away police investigation

 

சேலம் அருகே, 17 வயது சிறுமியை பெற்றோரே ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கூறி, அவளுடைய காதலனின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயது மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (27) என்பவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். செப். 19ம் தேதி, சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சம்பத் அழைத்துச் சென்றுள்ளார். 

 

ஆனால், சம்பத் தன் மகளை மயக்கிக் கடத்திச்சென்று ஆபாசமாக நடந்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர், காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டனர். சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சம்பத்தை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். இந்நிலையில், சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி இரவு, அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

அன்று இரவு சேமலாவின் கணவர் அறிவழகனும் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். திங்கள்கிழமை (செப். 26) காலை வீட்டிற்கு வந்த அறிவழகன் வீட்டில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறி சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். 

 

அப்போது, சிறுமியின் காதலனான சம்பத்தின் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் திடீரென்று சடலத்தை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிக்கு விருப்பம் இல்லாத இடத்தில் அவளை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவள் சம்மதிக்காததால் மகள் என்றும் பாராமல் பெற்றோரே ஆணவக் கொலை செய்துவிட்டு, தாயாரும் தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சாட்டினர். 

 

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் டி.எஸ்.பி ஸ்வேதா தலைமையில் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடற்கூராய்வு செய்த பிறகு அவள் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவரும். அதன்படி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.