Skip to main content

சேலம் மருத்துவர் சீனா நாட்டுப் பெண்ணை மணந்தார்! திரைகடலோடியும் மணப்பெண் தேடும் தமிழர்கள்...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சீனா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரசுரமன். கால்நடைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள். பதிவுத்துறையில் சார் பதிவாளராக உள்ளார். இவர்களுடைய மகன் அருண்பிரசாத். மருத்துவர். எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

 

 Salem doctor married Chinese woman!

 

அங்குள்ள ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் சீனா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் என்ற இளம்பெண், தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அருண்பிரசாத், கிறிஸ்டல் ஜியாங்கும் பகுதி நேரமாக வேறு ஒரு நிறுவனத்திலும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அப்போது இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்தப் பழக்கம் காதலாக கனிந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அருண்பிரசாத்தான் தனது காதலை முதலில் கிறிஸ்டலிடம் கூறியிருக்கிறார். இதற்கு ஆரம்பத்தில் அவர் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். அன்னலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள். இரு மனங்கள் ஒன்றானபின் அடுத்து திருமணம்தானே? என்னதான் வெளிநாட்டில் பணி, அந்நிய நாட்டுப் பெண்ணைக் காதலித்தாலும் மருத்துவர் அருண் பிரசாத், பெற்றோர் சம்மதத்துடன் காதலியைக் கரம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து அவர், தான் விரும்பும் பெண்ணையே மணம் முடித்து வைக்குமாறு சேலத்தில் உள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர் இதைக்கேட்டு திகைப்படைந்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டனர். கிறிஸ்டல் ஜியாங்கும் தனது பெற்றோரிடம் அருண்பிரசாத்தை மணம் முடிக்க சம்மதம் பெற்றார்.

காதல் கல்யாணத்தில் கைகூடும் வேளை நெருங்கி வந்தது. இந்நிலையில்தான் சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் அவர்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. சேலம் பேராயர் சிங்கராயன் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்தினார்.

பின்னர், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 3) நடந்தது. அருண்பிரசாத்தின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். மணப்பெண் கிறிஸ்டல் ஜியாங் தரப்பில் அவருடைய பெற்றோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதுகுறித்து மருத்துவர் அருண்பிரசாத் கூறுகையில், ''நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக காதலித்தோம். இருவரின் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம். தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது கிறிஸ்டல் ஜியாங் மட்டுமின்றி அவருடைய பெற்றோருக்கும் ரொம்பவே  மதிப்பு உண்டு,'' என்றார்.

இன்னும் சில நாள்களில் புதுமணத் தம்பதி, ஆஸ்திரேலியா சென்று பணிகளைத் தொடர இருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் இருவருக்கும் பெண் வீட்டார் தரப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடி வந்த தமிழர்கள் அண்மைக் காலங்களாக மணப்பெண்களையும் தேடி வருவது கணிசமாக அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.