Skip to main content

சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இருவர் இன்று சரண்!!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலம் அருகே நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு ரவுடிகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளனர். 


சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் மோகன் (29). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.
 

salem district real estate incident surrender at court


இந்த சம்பவம் தொடர்பாக சேலம் புறநகர் டிஎஸ்பி உமாசங்கர் மேற்பார்வையில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.


விசாரணையில், திருச்செங்கோடைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து மோகனை தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது. அவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதற்கிடையே, சேலம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த மாவீரன் என்கிற பெரிய வீரன் (35), சூரமங்கலத்தைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (37), திருச்செங்கோடைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (35) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள்தான் மோகனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. திருச்செங்கோடைச் சேர்ந்த சுரேஷ் ஆலோசனையின்பேரில், அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் தலைமையில் 8 பேர் சேர்ந்து, மோகனை வெட்டிக் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரிய வந்தது.

 

இதையடுத்து, பெரிய வீரன், மணிகண்டன், மகுடேஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை புதன்கிழமை (அக். 9) சேலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாகராஜ் என்ற ரவுடி பவானி நீதிமன்றத்திலும், செல்வம் என்ற ரவுடி நெல்லை நீதிமன்றத்திலும் வியாழக்கிழமை (அக். 10) சரணடைந்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.