Skip to main content

மாணவியைத் திருமணம் செய்த உதவி பேராசிரியர்! பல்கலைக்கழகத்தில் பரபரப்பு!!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

salem district, periyar university assistant professor, student

 

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர், தன்னிடம் படித்த மாணவியைக் காதலித்து திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவி பேராசிரியராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார்; திருமணம் ஆகாதவர். இதே பல்கலைக்கழகத்தில் தர்மபுரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் எம்.ஏ., ஆங்கிலம் இறுதியாண்டு படித்து வருகிறார். அந்த மாணவி, பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.

 

பாடம் தொடர்பாக அடிக்கடி சந்தேகம் கேட்கப் போனதில், உதவி பேராசிரியருக்கும் மாணவிக்கும் நட்பு அதிகரித்தது. ஒருகட்டத்தில், காதலாக மலர்ந்தது. இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வந்தததை அடுத்து, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

உடனடியாக மகளுக்குத் திருமணம் செய்து வைக்கவும் மாணவியின் பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். பெற்றோர் தரப்பில் நெருக்கடி அதிகரித்து வந்ததை அடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, உதவி பேராசிரியரும், மாணவியும் திடீரென்று ஓட்டம் பிடித்தனர்.

 

இதையறிந்த மாணவியின் பெற்றோர், சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் தன் மகளை, உதவி பேராசிரியர் கடத்திச் சென்றதாக புகார் அளித்தனர். காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக இரும்பாலை காவல் நிலையத்தில் ஜன. 30- ஆம் தேதி ஆஜராகினர். 

 

மாணவியின் பெற்றோர் வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது, இனி தன் காதல் கணவரான உதவி பேராசிரியருடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து மாணவி மற்றும் அவருடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிய காவல்துறையினர், உதவி பேராசிரியருடன் மாணவியை அனுப்பி வைத்தனர். 

 

தன்னிடம் படித்து வந்த மாணவிக்கே காதல் வலை வீசி, கரம் பிடித்த உதவி பேராசிரியரின் நடவடிக்கை பல்கலைக்கழக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; தேர்வு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
4000 Assistant Professor posts; Exam Notification


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.