Skip to main content

சேலம் அருகே 140 ரூபாய்க்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; இளைஞர் கைது!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

சேலம் அருகே, கஞ்சா மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான இளைஞர், வெறும் 140 ரூபாய்க்காக மூதாட்டியை கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் முத்து (57). இவருடைய தாயார் பழனியம்மாள் (75). இவர், தனது கணவர் பெரியண்ணன் இறந்து விட்டதை அடுத்து, முத்துவின் பராமரிப்பில்தான் வாழ்ந்து வந்தார்.  


இந்நிலையில், பிப்.27ம் தேதி, வீட்டுக்கு அருகில் உள்ள ரேஷன் கடை முன்பு பழனியம்மாள் உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 20 வயது இளைஞர் ஒருவர், திடீரென்று பழனியம்மாள் அருகே அமர்ந்து அவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார். பின்னர் அந்த இளைஞர், மூதாட்டி அணிந்திருந்த தோடு, மூக்குத்தியைக் கழற்ற முயன்றார். சந்தேகம் அடைந்த அவர், கூச்சல் போட்டார்.

salem district grandmother incident police investigation

அவருடைய கூச்சல் சத்தத்தில் ஊர் மக்கள் கூடிவிட்டால் என்ன செய்வது என்று பதற்றம் அடைந்த அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்துள்ளார். 


அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வரவே, அந்த மர்ம நபர், மூதாட்டி வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். கழுத்தை அறுத்ததால் அதிக ரத்தம் வெளியேறியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்பாலை காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவ இடம் அருகில் தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், மூதாட்டியை கழுத்து அறுத்துக் கொன்றவர் வேடுகாத்தாம்பட்டி பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலாஜி (20) என்பது தெரிய வந்தது. திருமலைகிரி பகுதியில் பதுங்கியிருந்த பாலாஜியை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (பிப். 28) கைது செய்தனர். 


காவல்துறையில் கொலையாளி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:


"நான் வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அம்மா இறந்து விட்டார். அதன்பிறகு நான் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். 


நண்பர்கள் சிலர் மூலமாக எனக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் சூதாடும் பழக்கமும் ஏற்பட்டது. இது இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்புகூட எங்க சித்தி வீட்டில் 5 ஆயிரம் ரூபாயைத் திருடி, சீட்டு ஆடினேன். அந்த ஆட்டத்தில், எல்லா பணத்தையும் தொலைத்துவிட்டேன். 


மூதாட்டி பழனியம்மாள் தோடு, மூக்குத்தி, கால் காப்புகளை போட்டுக்கொண்டு தனியாக ரோட்டோரமாக ரொம்ப நேரமாக உட்கார்ந்து இருந்ததை நோட்டமிட்டேன். அதனால் அவரிடம் பேச்சுக்கொடுப்பதுபோல் நெருங்கி, தோடு, மூக்குத்தியை பறிக்க முயன்றேன். அதற்கு அவர் கத்தி கூச்சல் போட்டதால் கழுத்து அறுத்துக் கொன்றுவிட்டு, அவருடைய சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டேன். ஆனால் அந்த சுருக்குப்பையில் வெறும் 140 ரூபாய்தான் இருந்தது." இவ்வாறு கொலையாளி பாலாஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


வெறும் 140 ரூபாய்க்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.