Skip to main content

சிறையில் போக்சோ கைதி தற்கொலை! மாஜிஸ்ட்ரேட் விசாரணை!!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

salem central prisoner incident magistrate investigation

 

சேலம் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் செண்பகமாதேவியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (36). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் தன் நண்பருடன் சேர்ந்து 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில், சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு மே மாதம் அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை, சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப். 23) அதிகாலை 05.00 மணியளவில், சேலம் மத்திய சிறையில் வார்டன்கள் ஆய்வு செய்தனர். அப்போது 8- வது தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த அசோக் குமார், மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு, சடலமாகத் தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து சிறை வார்டன்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அசோக் குமாருக்கு, ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடையும் நிலையில் இருந்தது. எப்படியும் இந்த வழக்கில் தனக்கு ஆயுள் தண்டனை கிடைத்துவிடும் என்ற பயத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. அதனால் விரக்தி அடைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதுதவிர, வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை கைதி தற்கொலை செய்தகொண்ட சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணையும் நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.