Skip to main content

சேலம் கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Salem call taxi driver case life sentence for two

 

சேலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மணியனூர் பாண்டு நகரைச் சேர்ந்தவர் அபிஷேக்மாறன் (29). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். தனக்குச் சொந்தமான மூன்று கார்களையும், தான் வேலை செய்து வந்த டிராவல்ஸ் நிறுவனத்திடமே வாடகை ஒப்பந்தத்திற்கும் விட்டிருந்தார். 

 

அபிஷேக் மாறனுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கருத்து வேறுபாட்டால் மனைவி குழந்தையுடன் தனியாக பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து அபிஷேக்மாறன் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரும் பிரிந்து சென்று விட்டார். 

 

இந்நிலையில் அபிஷேக்மாறன், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் வசிக்கும் தன் நண்பன் பிரபாகரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருடைய மனைவியுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில், பிரபாகரனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும், செல்போனிலும் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதையறிந்த பிரபாகரன், அபிஷேக்மாறனை எச்சரித்தார். ஆனாலும், அவர் செல்போன் மூலம் மீண்டும் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதைடுத்து, கடந்த 2020ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, அபிஷேக் மாறன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அன்று அதிகாலையில் அங்கு வந்த பிரபாகரனும், அவருடைய கூட்டாளியான எருமாபாளையத்தைச் சேர்ந்த அருள்குமார் (23) என்பவரும், அபிஷேக்மாறனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அபிஷேக்மாறனை கொலை செய்ததாக பிரபாகரன், அருள்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திங்கள்கிழமை (செப். 26) தீர்ப்பு அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.