Skip to main content

சேலம்: பாலியல் வழக்கில் சிக்கிய விசிக பிரமுகருக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

சேலத்தில், ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். இவர் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு வரவழைத்து, அவரை தாக்கியும், மிரட்டியும் பாலியல் வல்லுறவு கொள்ளும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த மாதம் பரவியது.

 

vck

 

மேலும், அவர் பல பெண்களை மிரட்டியே பாலியல் வல்லுறவு கொண்டதாகவும், அந்தக்காட்சிகளை வீடியோவாக படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி அச்சுறுத்தி குறிப்பிட்ட சில பெண்களுடன் அடிக்கடி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோமோசெக்ஸ் புகாரின்பேரில் மகுடஞ்சாவடி காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்தனர்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் பரவிய ஆபாச வீடியோவில் பதிவு செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாநகர காவல்துறை எல்லைக்குள் நடந்ததால், அந்த வழக்கு மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் இருந்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மோகன்ராஜ் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லப்பட்ட மேகலா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை தேடிப்பிடித்த காவல்துறையினர், அவரிடம் இருந்து எழுத்து மூலம் புகாரைப் பெற்றனர்.

 

vck

 

அந்தப் புகாரில் மேகலா, ''நான் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதனால் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், வறுமை காரணமாக குடும்பச் செலவுகளுக்காக மோகன்ராஜிடம் 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அந்தப்பணத்தை குறிப்பிட்ட தேதியில் தர முடியாமல் தாமதம் ஆனது. ஒருநாள் என்னை தன் வீட்டுக்கு அழைத்த மோகன்ராஜ், 2 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பித்தர தாமதம் ஆனதைச் சுட்டிக்காட்டி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோவை பொதுவெளியில் பரப்பி விடுவேன் என்று சொல்லி அடிக்கடி என்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டார்,'' என்று கூறியிருந்தார்.

மேகலா அளித்த புகாரின்பேரில், மோகன்ராஜ் மீது பாலியல் வல்லுறவு, தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல் மற்றும் சைபர் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தது. ஏற்கனவே ஹோமோசெக்ஸ் புகாரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மோகன்ராஜை மேகலாவின் புகாரின்பேரிலும் கைது செய்தனர்.

 

vck

 

இந்நிலையில்தான், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, சேலம் மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, வெள்ளிக்கிழமை (அக். 11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில்குமார், பாலியல் புகாரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மோகன்ராஜை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து மோகன்ராஜை காவலில் எடுத்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது