Skip to main content

கரோனாவால் நலிவடைந்த பீங்கான் தொழில்... நவராத்திரி கொலு பொம்மைகளின் விற்பனை குறைவு! விரக்தியில் விருத்தாசலம் பீங்கான் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Sale of Navratri  toys declines Ceramic manufacturers and workers in despair!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'கிளே' எனப்படும் 'வெள்ளை களிமண்' அதிக அளவில் கிடைப்பதால், அதனைக் கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், 1965ஆம் ஆண்டு விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.
 

இப்பகுதியில், தமிழ்நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின் கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்திக் கூடம், செராமிக் மூலப் பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களைச் சூடேற்றும் கில்லன் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 

இத்தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டீ கப், வாட்டர் ஃபில்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சாமி சிலைகள், தலைவர் சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள், இயற்கைக் காட்சிப் பொருட்கள், வாஷ்பேசின், அகல் விளக்குகள், சானிட்டரி பொருட்கள் மற்றும் மின்சாரத் துறைக்குத் தேவையானப் ஃபியூஸ்கேரியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.
 

மேலும் இதனைச் சார்ந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் பீங்கான் பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.
 

Ad

 

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவால் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 200க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிற்கூடங்களும் மூடப்பட்டு, பின்னர் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.  ஆனால், தீபாவளி விளக்குகள், கார்த்திகை தீபம், கொலு பொம்மைகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட வேண்டும் என்றும், கரோனா தொற்று காலத்தால், நான்கு மாதங்களாக எவ்விதப் பணிகளும் செய்யாமல், தற்போது சிறு, குறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் உற்பத்தியாளர்கள் வரை அனைவரும் வங்கி மற்றும் மகளிர் குழு உள்ளிட்டவைகளில் கடன் பெற்று அகல் விளக்கு மற்றும் கைவினைப் பொருட்களைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர். 
 

இந்நிலையில், போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் வெளிமாநில வியாபாரிகள் வராததால் பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், உற்பத்தியாளர்களின் பொருட்களை வாங்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும், விற்பனை குறைவாக நடைபெறுவதால் சிறு குறு உற்பத்தியாளர்கள் செய்யும் பொருட்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால், பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கூட, வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள், கடந்த 3 மாதமாக தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் விழாக்களுக்காகப் பயன்படுத்தப்படும், அகல் விளக்குகள் செய்யும் பணிக்கு வருகை தந்தாலும், மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்கான பிரச்சனைகள் மற்றும் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொருட்களைக் காய வைப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுவதாக அப்பகுதி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 

மேலும், கரோனா பரவல், மூலப்பொருட்களின் விலை, ஆட்களின் கூலி, வாடகை, மின்சார செலவு, பருவ மாற்றம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான செராமிக் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டது மட்டும் இல்லாமல், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடனை கட்டச் சொல்வதால் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

 

Nakkheeran

 

எனவே தமிழக அரசு நலிவடைந்த செராமிக் தொழில் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என்றும்  கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாதத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களிடம் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது .ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.