Skip to main content

அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

 Sagayam IAS released from government service

 

விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிக்கப்பட்டார். 

 

நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம் ஐ.ஏ.எஸ். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஐ.ஏ.எஸ்., தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் கடிதம் அளித்து மூன்று மாதங்கள் முடிந்ததால் சகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

 

58 வயதை கடந்த சகாயம் ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3வது நாளாக மக்கள் நலப் பணியாளர்கள் தொடர் போராட்டம் (படங்கள்)

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

2006 மற்றும் 2011ஆம் ஆண்டு திமுக அரசால் வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். இறந்த பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி நிவாரண நிதியும் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கும் அறிவிப்பை முதல்வர் அறிவிக்க வேண்டும் மற்றும் அதிமுக அரசால் 3வது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

Next Story

'சகாயம் உடல்நிலை நன்றாக உள்ளது' - மருத்துவமனை தகவல்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

sagayam ias coronavirus positive chennai government hospital

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் 'சகாயம் அரசியல் பேரவை' என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும் சகாயம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாயத்திற்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 8- வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

சகாயம் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் டீன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். உடல்நிலை நன்றாக உள்ளது. மீண்டும் பரிசோதனை செய்து கரோனா இல்லை எனத் தெரியவந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார்.