Skip to main content

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Rural development department officers struggle

 

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதன்படி கடந்த 19ஆம் தேதி அவரவர் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அடுத்து 23 மற்றும் 24ஆம் தேதிகளில் அலுவலகத்திற்கு வராமல் ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டம் செய்தனர். 

 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த 45 வயது முத்தான் என்பவர் 24ஆம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். முத்தான் பணி சுமை காரணமாகவே  இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், முழுவதும் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 26ஆம் தேதி ஒரு நாள் பணியை புறக்கணித்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊராட்சிச் செயலர் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும், ஊழியர்களுக்கு பணி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் இறந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினார்கள். 

 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, நம்பியூர் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 வட்டாரங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவர்கள் சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை  புறக்கணித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.