Skip to main content

‘ரூ.300 கோடி வேண்டுமா..?’ ரூ.2.70 கோடி ஏமாற்றிய அதிமுக கூட்டணியின் சீட்டிங் வேட்பாளர் கைது...!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Rs 2.70 crore cheated by Rajasekaran has been arrested

 

கடன் வாங்கித் தருகிறேன் என ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒருவரை அதிகாலை 3 மணி அளவில் காரைக்குடி போலீஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர் தெலுங்கானா போலீஸார்.

 

2018ல் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிங்கோடி பகுதியினைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர், தனது மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளை விரிவுப்படுத்தும் நோக்குடன் வங்கிக் கடனுக்கு அலைந்திருக்கிறார். இவ்வேளையில், இவரது பணத்தேவையை அறிந்துகொண்ட ராஜேஷ் சந்திரன் மற்றும் பெருமாள்ராஜ் ஆகியோர், "தங்களுக்கு தெரிந்த செட்டியார் ஒருவர் பெரிய அளவில் கடன் கொடுப்பதாக ஆசைகாட்டி எஸ்.ஆர். தேவர் என்றழைக்கப்படும் ராஜசேகரை கடன் கொடுக்கும் செட்டியாராக அறிமுகம் படுத்தியுள்ளனர். 

 

'ரூ.300 கோடி என்பது எளிதான விஷயம். ஆனால் இதற்காக டாக்குமெண்ட் சார்ஜ், முதல் தவணைத் தொகை என அட்வான்ஸ் தொகையாக மட்டும் ரூ.2.70 கோடி கொடுக்க வேண்டுமென' ராஜசேகர் கூற, அதற்கடுத்த சில நாட்களிலேயே ராஜசேகர் கேட்ட மொத்தத் தொகையும் செட்டில் செய்துள்ளார் லட்சுமி நாராயணன். எனினும் நாட்கள் நீண்ட நிலையில் இவர் கேட்ட ரூ.300 கோடி கடன் வரவில்லை. இதனால் கடந்த 2020ம் ஆண்டு, தான் ஏமாந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் ராஜசேகரை தேடிவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பண மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள எஸ். ராஜசேகர், ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதும், இதற்கு முன்பாக சிவகங்கை திருநெல்வேலி மாவட்டங்களில் இவர் மீது ஆறு பண மோசடி வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.