Skip to main content

“மழையிலிருந்து நெல்லை காக்க ரூ.250 கோடியில் அரசு திட்டம்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

"Rs. 250 crore government scheme to protect paddy from rain" - Minister Chakrapani

 

திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகங்களை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதில் தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கை ஆய்வு செய்துவிட்டு மேற்கூரையுடன் கட்டப்பட்டு வரும் நிரந்தர சேமிப்புக் கிடங்கையும் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “மூன்று லட்சம் டன் நெல்லை சேமித்து வைப்பதற்காக மேற்கூரையுடன் நிரந்தர கிடங்குகள் ரூ.250 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 20 இடங்களில் நடைபெற்று வருவதால், வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையும். தமிழக முழுவதும் தனியார் பங்களிப்புடன் 13 நவீன அரிசி ஆலை தொடங்கப்பட இருக்கிறது. அதில் தினமும் 6800 மெட்ரிக் டன் அரிசி அறவை செய்யப்படும். அதுபோல் 7 லட்சத்து 904 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

 

இனிவரும் காலங்களில் திறந்த வெளியில் நெல் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியதின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கருப்பு பழுப்பு இல்லாத அளவுக்கு அரிசி, நெல் ஈரப்பதத்தை 21% உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ், நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.