/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3895.jpg)
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில்மசினிஎன்ற யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டுமசினிஎன்ற யானை முதுமலை காப்பகத்திலிருந்துதிருச்சிசமயபுரத்திற்குகோவில்யானையாகச்சென்றது. அப்போது மசினியானை அதன் பாகனை தாக்கியதில்அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும்மசினியானை முதுமலை யானைகள்முகாமிற்குக்கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுபராமரிக்கப்பட்டது.
இதையடுத்துமசினியானையைபாலன் என்ற பாகன் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று பாலன் யானைக்கு உணவளித்துவிட்டு அதன் மேல் அமர்ந்து காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென யானைபாகன்பாலனைத் தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து பாலனின் உடல் கூடலூர் அரசுமருத்துவமனைக்குபிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த பாலனின்குடும்பத்திற்குரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவரதுகுடும்பத்தில்ஒருவருக்குப்படிப்புக்கு ஏற்றார்போல் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதுமலை புலிகள் காப்பகஇயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)