Skip to main content

ரூ.8 லட்சம் கொள்ளை வழக்கில் சிக்கிய கொள்ளையர்கள் கைது...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Robbers arrested in Rs 8 lakh robbery case
மாதிரி படம்

 

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ளது திருவக்கரை. இங்குள்ள சந்திரமவுலீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் பழனி கல்லுடைக்கும் ப்ளூ மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 29ம் தேதி இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மகனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

 

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படை கொள்ளையர்களைத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் போலீசார் செங்கமேடு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக இரு பைக்குகளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். 

 

அவர்கள் திருக்கனூர் அடுத்துள்ள சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கார்மேகம் வயது 19, மோகன் மகன் அருளரசன் வயது 19, அண்ணாமலை மகன் அப்பு என்கிற செந்தில்குமார் வயது 19, செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளி வயது 27 என்பது தெரியவந்தது. இதில் தமிழ்வாணன் தலைமையில் 6 பேர் சேர்ந்து பழனி வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். 

 

இந்த கொலை வழக்கில் சிக்கியுள்ள முரளி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனியிடம் கார் டிரைவராக வேலை செய்து பின் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். பழனி வீட்டில்  பணி செய்தபோது, அவரது வீடில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த முரளி இந்த கொள்ளைக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடும்போது தாக்குவதற்காக 3 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தனர். அவைகளை கைப்பற்றிய போலீசார் மேலும் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய செல்போன்கள் தங்க நகைகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களின் கூட்டாளி தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.