Skip to main content

வயதான முதியோர்களிடம் கொள்ளையர்கள் கைவரிசை...

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

Robberies theft gold from old couple

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர் சின்னு இவரது மனைவி மல்லிகா வயது 60. இவர்களுக்கு 2 மகன் மூன்று மகள்கள் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அவரவர் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சின்னுவும் அவரது மனைவி மல்லிகாவும் தங்களது பூர்வீகமான வீட்டில் தனியே வசித்து வந்துள்ளனர். 


நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் உணவை முடித்துக் கொண்டு படுத்து தூங்கி உள்ளனர். மறதி காரணமாக வீட்டின் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கி உள்ளதாக தெரிகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவு வழியே வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 

கொள்ளையர்களின் சத்தம் கேட்டு கணவன், மனைவி இருவரும் எழுந்தனர். அப்போது இருவரையும்  கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதோடு மல்லிகா கழுத்திலிருந்த 6 பவுன் தாலிக்கொடி, 3 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் சத்தம் போட்டு கத்தி உள்ளனர். 

இவர்கள் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் கொள்ளையர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து சின்னசேலம் காவல் நிலைத்தில் சின்னு அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்துள்ளனர். 


இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், முருகன், மனோகரன், தங்கத்துரை உள்ளிட்ட போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பணம் நகையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறுகின்றனர். ஊருக்கு நடுவே வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் உள்ள ஒருவீட்டில் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.