Skip to main content

கரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டதால் பழைய தொழிலுக்கு மாறிய கொள்ளையன்...!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

The robber who switched to the old profession as the industry was affected by Corona ...!

 

 

சென்னை எம்.கே.பி. நகர் மத்திய நிழற்சாலை அப்துல்கலாம் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜோசப் செல்வராஜ். இவர் வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி தன்னுடைய மகன் அலெக்சாண்டர் என்பவருக்கு திருமணம் நடந்து. மகன், மருமகள், மற்றும் ஜோசப் செல்வராஜின் மனைவி அனைவரும் பெங்களூர் சென்றனர். ஜோசப் மட்டும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார் ஜோசப். மாலையில்  எதிர் வீட்டில் வசித்து வரும் லலிதா என்பவர் ஜோசப் செல்வராஜூக்கு போன் செய்து உங்களது வீட்டில் ஏதோ சத்தம் வருகிறது என்று கூறியுள்ளார். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்கம் மற்றும் 4 வைர கம்மல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

 

அதிர்ச்சியடைந்த ஜோசப் செல்வராஜ் எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்தகவலின்பேரில் அங்கு சென்ற எம்.கே.பி. நகர் போலீசார் அந்தப் பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனிடையே குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு கார் அந்த பகுதி முழுவதும் சுற்றி வந்தது கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்த பொழுது ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய கார் என்பது தெரியவந்தது. 

 

இதனால் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் கண்டிகை பகுதி சென்று அந்த கார் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கடந்த 2 வருடத்திற்கு முன்பு தனது காரை இடை தரகர் ஒருவர் மூலமாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த நபருக்கு விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

 

இதனால், ஆந்திரா சென்ற தனிப்படை போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும் இடைத்தரகரின் தொலைபேசி எண்ணை பெற்றுகொண்டு அவரது மூலமாக புரசைவாக்கத்தில் கார் வாங்கிய நபரின் முகவரியை பெற்று கொண்டு அங்கு சென்று பார்த்தபொழுது அந்த முகவரில் அந்த நபர் வசிக்கவில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே அந்த நபர் குடும்பத்துடன் செங்குன்றம் அடுத்த காரோனோடை பகுதியில் குடியேறியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இரண்டாவது இடத்திலும் ஏமாற்றமடைந்த போலீசார், அக்கம் பக்கத்தினர் கூறிய முகவரியைத் தேடி நேற்றைய தினம் ரெட்டில்ஸ் காரனோடை அருகிலுள்ள ஆத்தூர் என்ற ஊரில் சென்றபொழுது சொகுசு பங்களா கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தவறான இடத்திற்கு மீண்டும் வந்து விட்டோமோ என்று நினைத்துக்கொண்டே விசாரணை மேற்கொண்ட பொழுது, அந்த காரின் உரிமையாளர் எனக்கூறி வாலிபர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அவரிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு விசாரித்த பொழுது தனது தந்தைதான் இந்த காரை பயன்படுத்துவதாகவும், நேற்று கார் தொலைந்துவிட்டதாகவும் தெரிவித்து அதனை தேடிகொண்டு இருப்பதாகவும் கூறினார்.

 

இதனால் கொள்ளையர்கள் யாரேனும் காரை திருடி கொள்ளை அடித்து இருக்கலாம் என நினைத்த போலீசார் எதற்கும் தந்தையை விசாரிக்கவேண்டும் எனக்கூறியுள்ளனர். அதற்கு அவர், தந்தை தற்பொழுது இங்கு இல்லை எனக் கூறவே போலீசாருக்கு சந்தேகம் எழுத்துள்ளது. உடனே அந்த வாலிபரின் எண்ணில் இருந்து அவரது தந்தையின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி நீங்கள் வரவில்லை என்றால் உங்களது மகனை கைது செய்யக்கூடும் எனன்கூறியதையடுத்து அங்கு வந்த அவர், போலீஸார் விசாரித்தபோது, தான் ரியல் எஸ்டேட் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியாள்ளார். 

 

The robber who switched to the old profession as the industry was affected by Corona ...!

 

அதன்பிறகு போலீஸார் தங்களது ஸ்டைலில் விசாரித்ததில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் வைரக்கம்மல் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஜான்சன்  ஈடுபட்டு இருந்ததும் அதன் பிறகு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கி அதில் மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது கரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால்  கடந்த எட்டு மாதங்களாக எந்தவித ரியல் எஸ்டேட் தொழிலும் சரியாக போகாததால் மீண்டும் பழையபடி காரை எடுத்துக்கொண்டு வியாசர்பாடி பகுதிக்கு வந்ததாகவும், குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் இரண்டாவது தளத்திற்கு சென்று மற்ற வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டு குறிப்பிட்ட வீட்டின் பூட்டை மட்டும் உடைத்து திருடி சென்றதாகவும் குற்றவாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை; 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திருப்பம்!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

15 lakh page charge sheet against real estate owner
வின் ஸ்டார் சிவக்குமார்

 

சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் வின் ஸ்டார் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதான மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.    

 

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, வின் ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். நிலத்தில் முதலீடு செய்தால் 11 மாதத்தில் இரட்டிப்பு விலை கொடுத்து நாங்களே நிலத்தை வாங்கிக் கொள்கிறோம் அல்லது அதற்கு நிகரான லாபத்தைக் கொடுத்து விடுவதோடு, அசல் முதலீட்டையும் கொடுத்து விடுகிறோம் என்று பல்வேறு விதமான கவர்ச்சி அறிவிப்புகளை வின் ஸ்டார் நிறுவனத்தார் வெளியிட்டனர். ஒருகட்டத்தில், எம்எல்எம் முறையிலும் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தினர்.    

 

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வின் ஸ்டார் நிறுவனத்தில் முதலீடுகளை கொட்டினர். இத்துடன் நில்லாமல் வின் ஸ்டார் பெயரில் ஜவுளிக்கடை, உள்ளூர் கேபிள் டிவி, ஸ்வீட் கடைகள், ஜவுளிக்கடை, பட்டாசு தொழில், நெல்லிச்சாறு விற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் இறங்கினார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஓரளவு லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அவர் தொடங்கிய மற்ற தொழில்களிலும் முதலீடு செய்தனர்.  இந்நிலையில், திடீரென்று சிவக்குமார் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். முதிர்வு காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார்.    

 

இதையடுத்து அவர் மீது 1686 முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து, கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். அவர் உட்பட 30 பேருக்கு இந்த மோசடியில் பங்கிருப்பதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.     

 

இந்தக் குழுவின் விசாரணையில், முதலீட்டாளர்களிடம் சுருட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு சிவக்குமார் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நிலங்களையும், வீடுகளையும் வாங்கிக் குவித்து இருப்பது தெரிய வந்தது.  பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதும் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு 50 ஆயிரம் பக்கங்கள் வீதம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேருக்கும் மொத்தம் 15 லட்சம் பக்கங்களில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை ஆவணங்களை நகல் எடுப்பதற்காகவே 14 லட்சம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்  விடப்பட்டது.       

 

இந்த வழக்கு, டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகை ஆவணங்கள்  தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து அக். 2ஆம் தேதி டான்பிட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில், ஒரு மோசடி வழக்கில் முதன்முதலாக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Next Story

சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 IT raid on a famous real estate company in Chennai

 

அண்மையில் தமிழகத்தில் மணல் குவாரி மற்றும் ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கக்கூடிய புரவங்கரா என்ற அந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தான் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனமானது பெங்களூரு, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிறுவனங்களை தொடங்கி அடுக்குமாடி குடியிருப்புகளையும் நிலங்களையும் வாங்கி விற்பனை செய்து வருகிறது.

 

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் இந்த நிறுவனமானது தொடங்கப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்றதில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் 1100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் வருமானத்தை ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எட்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.