Skip to main content

கரொனா பரவலால் சாலை மூடல்.... எங்களை வெளியே விடுங்கள்  என பொதுமக்கள் போராட்டம்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

வேலூர் மாநகரம், சின்ன அல்லபுரம் செல்லும் சாலையில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்தன. இதனால் அந்த சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, கரோனா பரிசோதனை நடத்தி முடிவுகள் வந்தபின்பே அடுத்தக்கட்ட பணிகளில் இந்த தெரு மக்கள் ஈடுப்படவேண்டும், ஏன் எனில் அவர் மூலம் யாருக்கு, எத்தனை பேருக்கு கரோனா பரவியுள்ளது என்பது தெரியாது. அது கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் ஒத்தொழைப்பு வழங்க வேண்டும், இல்லையேல் உங்களுக்கும் பாதிப்பு, உங்களால் பொதுமக்களுக்கும் பாதிப்பு என என சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் மக்களிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

 

Road closure due to Corona spread .... Public struggle to get us out!


அங்கு குடியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது தேவையென்றால், மாவட்ட நிர்வாகத்தின் உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் காய்கறி, மளிகை பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வரும் என சொல்லப்பட்டுள்ளது. கரோனா பாதித்த தெரு என்பதாலும், அந்த பகுதி மக்கள் தெருவை விட்டு வெளியேறாதபடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்புக்கு காவல்துறையினரை நிறுத்திவைத்துள்ளது.

இது எங்களுக்கு ஜெயில் போல் உள்ளது, நாங்கள் யாரும் வீட்டில் இருக்கமாட்டோம், பால்காரர்கூட எங்கள் தெருவுக்கு வர அனுமதிக்க மறுக்கிறீர்கள் இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி, தங்கள் தெருவில் உள்ள தடுப்புகளை எடுக்கக்கோரி ஏப்ரல் 17ந்தேதி மதியம், அத்தெரு மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களும் பொதுமக்களுக்கு இடையிலான இடைவெளி விடாமல் இருந்தனர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுடிப்படி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தள்ளி நின்றே பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.