Skip to main content

நீதிமன்ற உத்தரவு; வீடுகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை முயற்சி

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Residents are protesting against sealing houses Chidambaram

 

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட வேங்கான் தெருவில் உள்ள குருநமச்சிவாய கோயிலைச் சுற்றி 24 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருந்து வரும் இடம் ஆக்கிரமிப்பு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கு தொடுத்தனர்.  

 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 24 குடியிருப்புகளையும் காலி செய்து 30 நாட்களுக்குள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க காலக்கெடு விதித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி அங்கு குடியிருப்பவர்களுக்கு வீடுகளை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நீதிமன்றக் காலக்கெடு நேற்று புதன்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து வீடுகளைப் பூட்டி சீல் வைப்பதற்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் காவல்துறை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு வந்தனர்.

 

அப்போது குடியிருப்பு வாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், கவிதா சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, காங்கிரஸ் நகரத் தலைவர் மக்கீன் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் ஒரு வாரக்காலம் அவகாசம் வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

 

இதனிடையே, இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென்று அந்தக் கூட்டத்தில் இருந்த ரகு என்ற ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெண் ஒருவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்ததைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், கூட்டத்தில் ஒரு பெண் மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவர் மீது தண்ணீர் தெளித்து மயக்க நிலையிலிருந்து மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

 

இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் வரும் ஜனவரி 7-ந் தேதிக்குள் குடியிருப்புகளை குடியிருப்பு வாசிகளே காலி செய்து கொள்ளுவதாக எழுதிக் கொடுத்தனர். அதனடிப்படையில் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்தப் பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.