Skip to main content

“கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தவுடன்  நிவாரணம் வழங்கப்படும்” - ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

"Relief fund will be provided after the completion of the survey work" - Collector Chandrasekara Sagamuri

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர், அரங்கூர், பட்டூர், கீழக்கல்பூண்டி ஆகிய பகுதிகளில் நிவர் மற்றும் புரவி புயலில் பாதிக்கப்பட்ட சோளம்,  பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அதனைத் தொடர்ந்து திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது திட்டக்குடி பேரூராட்சி  செயல் அலுவலர் மத்தியாஸிடம், பேருந்து நிலையத்தில் யாராவது தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தால் வண்டிகளையும் பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.  மேலும் பேருந்து நிலையத்துக்குள் தள்ளுவண்டிகள் வராத அளவில் வேலிகள் அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம், தள்ளு வண்டிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.


 

அதேபோல் வேப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரையூர், கண்டப்பங்குறிசி, அரசங்குடிம் நந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோளம், பருத்தி, உளுந்து, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் இதுவரையில் 40 ஆயிரம் எக்டேர் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து  கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்”  என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.