Skip to main content

திமுக எம்.எல்.ஏ முயற்சியால் ஏழை மாணவர்களுக்கு தரப்பட்ட மடிக்கணினி!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

தமிழக அரசால் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்த மடிக்கணினிகள் தனியார் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள் என சில கல்வியாளர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை அதன்மீது கவனம் செலுத்தவில்லை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு.

ranipet district dmk party mla gandhi provide laptop 100 students


இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் இயங்கும் அரசு நிதியுதவி பெறும் எல்.எப்.சி என்கிற கிருஸ்த்துவ மேல்நிலை பள்ளி நிர்வாகம், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளருமான  காந்தியிடம், மடிக்கணினி அவசியம் குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தனர்.


இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ காந்தி தனது சொந்தி நிதியோடு, ராணிப்பேட்டையில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம், நிதியுதவி வாங்கி, 20 லட்ச ரூபாய் செலவில் 100 மடிக்கணினிகளை வாங்கி, அந்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கு டிசம்பர் 12ந்தேதி காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை காந்தியோடு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிலரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.