Skip to main content

ராமேஸ்வரம்  மீனவர்கள் 8 பேர் படகுடன் மாயம் - உறவினர்கள் பதட்டம்

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
rm

 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை மீன்பிடிக்க  அனுமதி சீட்டு இல்லாமல் மகேந்திரன் மைக்கில் , என்பவரின் படகில் மீன்பிடிக்கச்சென்ற  மகேந்திரன், சின்னமுனியன், ஜெயபால் , நாகராஜ் குமார் , ஸ்ரீதர், சிங்கராஜ் உள்ளிட்ட  எட்டு பேர் இதுவரை கரை திரும்பவில்லை. வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. நடுக்கடலில்  மாயமான மீனவர்களை தேடிக்கண்டுபிடித்து தர வேண்டும் என உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்