Skip to main content

புரோகிதர்கள் வராததால் இறந்தவர்களின் அஸ்தியினை தாங்களாகவே கரைக்கும் உறவினர்கள்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

rameshwaram sea temples Priests not there peoples


ஊரடங்கு காரணமாக ராமேஸ்வரம் பகுதிக்கு புரோகிதர்கள் வருகை இல்லாததால் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த அஸ்தியை எவ்வித சடங்கும் செய்யாமல் தாங்களாகவே கடற்பரப்பில் கரைக்கின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள்.
 


இறந்தவர்களின் அஸ்தியை, புரோகிதர்களைக் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் கடற்பரப்பில் கரைத்தால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பது பலரின் நம்பிக்கை. இதனால் எங்கு இறப்பினும் இறந்தவர்களின் அஸ்தியினை பாதுகாத்துக் குறிப்பிட்ட வேளையில் ராமேஸ்வரம் கடற்பரப்பில், புரோகிதர்கள் துணையுடன் பூஜை புனஸ்காரங்கள் செய்து கரைப்பார்கள் இறந்தவர்களின் உறவினர்கள். தற்பொழுது கரோனா வைரஸ் தொற்றுக் காரணாமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முற்றிலும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது, பின் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் போக்குவரத்து இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 

rameshwaram sea temples Priests not there peoples


இதனால் தமிழகத்தில் மண்டலம் வாரியாக பேருந்துகள் இயக்கப்பட்டதையடுத்து கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்குச் சொந்த வாகனங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் மற்றும் மறைந்த உறவினர்களின் அஸ்தியைக் கொண்டுவந்து அக்னி தீர்த்த கடற்கரையில் முறைப்படி பூஜைசெய்து கரைப்பதற்காகக் குடும்பத்துடன் பலர் வந்தவண்ணம் உள்ளனர். 
 


எனினும், கரோனா ஊரடங்கு காரணமாக இவர்களுக்காக பூஜை புனஸ்காரங்கள் செய்து தரும் புரோகிதர்கள் ராமேஸ்வரத்திற்கு வரவில்லை என்பதால் ஏமாற்றமடைந்து தாங்கள் கொண்டு வந்த அஸ்தியைத் தாங்களாகவே அக்னி தீர்த்தக் கடலில் கரைத்து விட்டு முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வழிபாடு நடத்திவிட்டு கடலில் குளித்து விட்டுச் சென்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.