Skip to main content

மதுவுக்குப் பதிலாகப் போதை மாத்திரைகள்... இளைஞர் மரணம்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

ramanathapuram youth incident police investigation


மது போதைக்கு அடிமையாகிவிட்ட இளைஞர் ஒருவர், மது கிடைக்காத நிலையில், போதைக்காக மாத்திரைகளையும், மருந்துகளையும் குடித்து பரிதாபமாக உயிரிழந்ததார். இதனால் மருந்தக உரிமையாளரைக் கைது செய்து சிறையிலடைத்தது மாவட்ட காவல்துறை.
 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் நீங்கலாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடக்கக் காலகட்டத்தில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் ஐந்து, ஆறு மடங்கு கூடுதல் விலையில் விற்கப்பட்டன. மது கிடைத்தால் போதும் என்றளவில் விலையைக் கண்டுகொள்ளவில்லை குடிமகன்கள். நாளடைவில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்படவே, மருந்தகத்தில் தூக்கத்திற்காக வழங்கப்படும் ALPARZOLAM வகையிலான மாத்திரையும், இருமலுக்குப் பரிந்துரைக்கப்படும் CODEINENE வகையிலான மருந்தும் குடிமகன்களின் போதையைச் சற்றே தணித்தன. மருத்துவர் ஆலோசனையின் பெயரில் விற்கப்பட்டும் இம்மருந்து, மாத்திரைகளைப் பணம் கிடைக்கிறதே என்பதற்காகக் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றன பல மருந்தகங்கள். இதனை வாங்கி விற்பதற்கென தனியாகக் கூட்டம் செயல்பட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளன.
 

ramanathapuram youth incident police investigation


இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா திணையத்தூரிலுள்ள ஸ்ரீ அம்மன் மருந்தகத்தில், மதுவுக்கு அடிமையான தொண்டிப் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் இளைஞர் ALPARZOLAM வகையிலான ANXIT 0.5 மாத்திரையை மருத்துவ ஆலோசனையில்லாமல் வாங்கி போதைக்காக உட்கொண்டு வந்துள்ளார். நாளடைவில் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 
 

இது மாவட்ட எஸ்.பி.க்கு ரகசியத் தகவலாகச் செல்ல, தொண்டி காவல் நிலைய எஸ்.ஐ.சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொண்டி எஸ்.ஐ.சரவணன், திருவாடனை அரசு மருத்துவர் மணிமுத்து, மருந்தாளுனர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து புகாருக்குரிய ஸ்ரீ அம்மன் மருந்தகத்தைக் கண்காணித்து வந்த நிலையில், தொண்டியைச் சேர்ந்த பயாஸ் மற்றும் சியாத் ஆகிய இளைஞர்கள் மருத்துவப் பரிந்துரையின்றி மேற்கண்ட தூக்க மாத்திரை அட்டை இரண்டினை ரூ.1,000-த்திற்கும், 100 மிலி பாட்டில் ஒன்று ரூ.150 வீதம் ரூ.8,250-க்கு 55 பாட்டில்கள் வாங்கியதும் தெரியவர கையும் களவுமாகப் பிடித்து விசாரிக்கையில், இங்கிருந்து வாங்கி பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தங்களின் வழக்கமென ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க, மருந்தக உரிமையாளர் மாரி மற்றும் விற்பனைக்காக வாங்கிய இருவரையும் "போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985 இன் படி வழக்குப் பதிவுசெய்து மூவரையும் கைது செய்துள்ளது மாவட்டக் காவல்துறை. 

போதைக்கு அடிமையாகி மாத்திரைகளை மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்த சதாம் உசேனுக்கு கர்ப்பிணி மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.