Skip to main content

கஞ்சா வியாபாரத்தில் போட்டி...போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாகவே கஞ்சா, போதை மருந்து கடத்தல் உள்ளிட்டவைகள் கொடிக்கட்டி பறக்கின்றன. சமூக விரோத செயலில் ஈடுபடும் தாதாக்கள் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் மாமூலால் காவல்துறையும் ஏனோ அதனைக் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றன. ஏதாவது ஒன்றிரண்டு புகார்கள் மாவட்ட எஸ்.பி.க்கு செல்ல கூலியாட்கள் சிலரை மட்டும் கணக்கிற்காக கைது செய்வதனை வழக்கமாக கொண்டுள்ளது கீழக்கரை காவல்துறை துணைச்சரகம். மக்களுக்கும் இது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த இரண்டு கொலைகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

ramanathapuram keelakkarai Competition in Cannabis police investigation sahul arrested

 

 

 

கீழக்கரை நகராட்சி முழுக்க கஞ்சா வியாபாரத்தில் தன் ஆளுமையை செலுத்தியுள்ள புதுத்தெருவினை சேர்ந்த இம்ரான்கான் சமீப காலமாக காணாமல் போன லிஸ்டில் இருக்க, இது தொடர்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி புகார் அளித்தும் போலீசார் வழக்கம் போல் கண்டும் காணாமல் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை அளித்திருந்தனர் அவரது உறவினர்கள். ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வேறு வழியில்லாமல் வழக்கை துரிதமாக கையிலெடுத்த கீழக்கரை போலீசார் மற்றொரு கஞ்சா வியாபாரியான சாகுலை கைது செய்தனர்.

 

 

ramanathapuram keelakkarai Competition in Cannabis police investigation sahul arrested

 

 

அவரிடம் நடத்திய விசாரணையில், 'கஞ்சா வியாபாரத்தில் " தான் மட்டுமே நெ.1 ஆக இருக்க வேண்டுமென்பதற்காக இம்ரான்கானை கொலை செய்து கடற்கரையோரத்தில் புதைத்துள்ளதாக ஒப்புக்கொண்டு சம்பவ இடத்தினையும் காண்பித்தார் சாகுல். போலீசாரும் உடலைக் கைப்பற்ற, தடயவியல் நிபுணர்கள் பிணக்கூராய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட இம்ரான்கான் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே கஞ்சா வியாபாரப் போட்டியில் சக கஞ்சா வியாபாரியான லுக்மான் என்பவரை கொலை செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. கஞ்சா வியாபாரப் போட்டியில் அடுத்தடுத்து விழும் கொலைகளால் கீழக்கரை அமைதியிழந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை..! சரி செய்வார்களா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.