Skip to main content

பெற்றோர் மணிமண்டபத்தை பார்க்க திருச்சி வரும் ரஜினிகாந்த !

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

ரஜினிகாந்த் தமிழக திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வலம் வருபவர். அதே போல கடந்த 20 வருடங்களாக அவர் அரசியலுக்கு வருகிறார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நேரடியாக அரசியலுக்கு வருவேன் என அறிவித்தது இன்னும் ரஜினியின் அரசியல் பிரவேச டெம்போவை குறைக்காமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

 

rajinikanth to visit his parents memorial in trichy

 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் என்பவர் திருச்சியை அடுத்த குமாரமங்கலம் பைபாஸ் ரோடு அருகே அவருக்கு சொந்தமான 1,850 சதுர அடி இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோர் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு ரூ.35 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினார். 

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராணராவ் நேரடியாக வந்து, பெற்றோரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். மணி மண்டபத்தில் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டாலின் புஷ்பராஜ் மணிமண்டபத்தை கட்டினாலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில்தான் திறப்பு விழா நடந்தது. இந்த நிலையில், மணிமண்டபத்திற்கு மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு ஸ்ரீரங்க ரெங்கநாதரை தரிசித்து விட்டு ரஜினிகாந்த பெற்றோர் சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்றார். 

அங்கே அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சாதுக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தாமதமாகிக்கொண்டே இருக்கிறதே? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியநாராயணராவ் கூறியதாவது:-

திருச்சியில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் விரைவில் வருவார். தற்போது அவர் மிகவும் ‘பிஸி’யாக உள்ளார். ஆனாலும், இங்கு நடக்கும் நிகழ்வுகளை தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக்கொண்டும்தான் உள்ளார். மண்டலாபிஷேக நிகழ்ச்சியில், நாட்டு மக்கள் நலமாக இருக்கவும், நல்ல மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.
 

rajinikanth to visit his parents memorial in trichy

 

ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அவர், அரசியலுக்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 23-ந் தேதிக்கு பிறகு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தாமதமாகி கொண்டு இருப்பது பற்றி சிலர் கூறி வருகிறார்கள். அவர் தாமதம் செய்வது நல்லதுக்கு தான். அவர், தமிழக மக்களுக்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை அவர் உற்றுநோக்கி வருகிறார். நிச்சயம் அவர், அரசியலுக்கு வந்தே தீருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனது பெற்றோர் மணிமண்டபத்தை பார்க்க திருச்சி வருகிறார் என்ற அறிவிப்பிலும் சூசகம் உள்ளது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழருவிமணியன் தலைமையில் ரஜினிகாந்த ரசிகர்கள் பொதுக் கூட்டம் பிரமாண்டமாக திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அறிவிப்பு வந்தது. அந்த பொதுக் கூட்டத்திற்கு பிறகு ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்றார். 

அதே போன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ரஜினியின் அடுத்த அரசியல் அறிவிப்பு இருக்கும் என்றும், அவருடைய பெற்றோரின் மணிமண்டபத்தை பார்க்க அவர் திருச்சி வருகிறார் என்கிற தகவலும் உறுதியான நிலையில், ரஜினிகாந்த், திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கான திட்டமும் இருப்பதாக ரஜினி கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.