Skip to main content

பெற்றோர் மணிமண்டபத்தை பார்க்க திருச்சி வரும் ரஜினிகாந்த !

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

ரஜினிகாந்த் தமிழக திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வலம் வருபவர். அதே போல கடந்த 20 வருடங்களாக அவர் அரசியலுக்கு வருகிறார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நேரடியாக அரசியலுக்கு வருவேன் என அறிவித்தது இன்னும் ரஜினியின் அரசியல் பிரவேச டெம்போவை குறைக்காமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

 

rajinikanth to visit his parents memorial in trichy

 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் என்பவர் திருச்சியை அடுத்த குமாரமங்கலம் பைபாஸ் ரோடு அருகே அவருக்கு சொந்தமான 1,850 சதுர அடி இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோர் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு ரூ.35 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினார். 

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராணராவ் நேரடியாக வந்து, பெற்றோரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். மணி மண்டபத்தில் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டாலின் புஷ்பராஜ் மணிமண்டபத்தை கட்டினாலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில்தான் திறப்பு விழா நடந்தது. இந்த நிலையில், மணிமண்டபத்திற்கு மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு ஸ்ரீரங்க ரெங்கநாதரை தரிசித்து விட்டு ரஜினிகாந்த பெற்றோர் சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்றார். 

அங்கே அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சாதுக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தாமதமாகிக்கொண்டே இருக்கிறதே? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியநாராயணராவ் கூறியதாவது:-

திருச்சியில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் விரைவில் வருவார். தற்போது அவர் மிகவும் ‘பிஸி’யாக உள்ளார். ஆனாலும், இங்கு நடக்கும் நிகழ்வுகளை தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக்கொண்டும்தான் உள்ளார். மண்டலாபிஷேக நிகழ்ச்சியில், நாட்டு மக்கள் நலமாக இருக்கவும், நல்ல மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.
 

rajinikanth to visit his parents memorial in trichy

 

ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அவர், அரசியலுக்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 23-ந் தேதிக்கு பிறகு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தாமதமாகி கொண்டு இருப்பது பற்றி சிலர் கூறி வருகிறார்கள். அவர் தாமதம் செய்வது நல்லதுக்கு தான். அவர், தமிழக மக்களுக்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை அவர் உற்றுநோக்கி வருகிறார். நிச்சயம் அவர், அரசியலுக்கு வந்தே தீருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனது பெற்றோர் மணிமண்டபத்தை பார்க்க திருச்சி வருகிறார் என்ற அறிவிப்பிலும் சூசகம் உள்ளது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழருவிமணியன் தலைமையில் ரஜினிகாந்த ரசிகர்கள் பொதுக் கூட்டம் பிரமாண்டமாக திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அறிவிப்பு வந்தது. அந்த பொதுக் கூட்டத்திற்கு பிறகு ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்றார். 

அதே போன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ரஜினியின் அடுத்த அரசியல் அறிவிப்பு இருக்கும் என்றும், அவருடைய பெற்றோரின் மணிமண்டபத்தை பார்க்க அவர் திருச்சி வருகிறார் என்கிற தகவலும் உறுதியான நிலையில், ரஜினிகாந்த், திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கான திட்டமும் இருப்பதாக ரஜினி கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது