Skip to main content

ரஜினியின் அரசியல் வெற்றி! ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா வழிபாடு?

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

“பிரபலங்களின் சாமி தரிசனமும் இங்கே அரசியலாகப் பார்க்கப்படுகிறது” என்றார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரஜினி ரசிகரான ஸ்ரீராம். 
விஷயம் இதுதான் –

 

i

 

தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. அங்கிருந்த தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், சினேகாவின் கணவர் பிரசன்னாவும், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளைத் தரிசிக்க வேண்டும்’ என்று அடிக்கடி சொன்னதால், அவ்விருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது,  அமரராகிவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனியும் உடன் இருந்தார். ஐஸ்வர்யா கோவிலுக்கு வந்ததை உள்ளூர் ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்த வழிபாடு அரசியலாகப் பேசப்படுகிறது.

 

i

 

ரஜினியின் அரசியல் வெற்றிக்காகவே ஐஸ்வர்யா ஆண்டாளைத் தரிசிக்க வந்தார் என்கிறார்கள். ஏனென்றால், அரசியலில் கால் பதித்தவர்களெல்லாம், அரசியல் வெற்றிக்கான வேண்டுதலோடு,  இங்கு வந்து சென்றதுண்டு.   

 

i

 

திமுக பிரமுகர்  தங்கமாங்கனியிடம் பேசினோம். “குற்றாலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த என் நண்பர் சொல்லி,  தனுஷ் உதவியாளர் சிங்கம் என்னிடம் பேசினார். அதனால், கோவிலுக்கு வரும்போது அவர்களுடன் சென்றேன். மூன்று நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று மாறிமாறி சொல்லியிருக்கின்றனர். அதனால்தான், தனுஷ் அனுப்பி வைத்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தரிசனம் முடித்துவிட்டு, சங்கரன்கோவில் சென்று சங்கரநயினார் – கோமதியம்மாளைத் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நேரமாகிவிட்டதால் செல்ல முடியவில்லை. இது வழக்கமான வழிபாடுதான். எனக்குத் தெரிந்து, அரசியல் வேண்டுதலெல்லாம் எதுவும் இல்லை.” என்றார். 

 

i


ஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தது,  மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றது, சடகோப ராமானுஜ ஜீயரைச் சந்தித்தது என, ஆன்மிக பரவசத்தில் திளைத்திருக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.