Skip to main content

மத்திய மாநில அரசுகள் தடை செய்ய உத்தரவிட வேண்டும்... -புதுச்சேரி சம்பவம் குறித்து ராஜேஸ்வரி பிரியா

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
rajeswari priya

 

அண்மையில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகி, விரக்தியடைந்த விஜயகுமார் என்பவர் தன் மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் உருக்கமான ஆடியோ பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமதி மூ.ராஜேஸ்வரி பிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

 

“தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் விஜயகுமார் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. முப்பது லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்து மன அழுத்தத்தின் உச்ச நிலைக்கு சென்று தவறான முடிவை எடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் தவிக்கவிட்டு அவர் எடுத்த முடிவு மிகவும் மோசமானதாகும். இதற்கு காரணமாக இருந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை நிச்சயமாக மத்திய மாநில அரசுகள் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.

 

இன்று பல பெயர்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. விஜயகுமாரின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். உடனடியாக, அரசு அனைத்து விதமான, ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் மன விரக்தியிலும், அடிமையாகவும் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதனை தயவுசெய்து எல்லோரும் உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.