Skip to main content

ராஜேந்திரபாலாஜிக்கு 15 நாள் ரிமாண்ட்! -முடிவுக்கு வந்த ஓட்டம்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

 Rajendrapalaji remanded for 15 days -The flow that came to an end!

 

இன்று (6-ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், ஒருநாள் முன்னதாக 5-ஆம் தேதி,   கர்நாடகா – ஹாசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜி கைதானார். மேலும், அவருக்கு அடைக்கலம் அளித்த ராமகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜிக்கு காரோட்டிய உதவியாளர் நாகேஷ், ஓசூர் ந.செ. ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்ட ஐ.டி. பிரிவு தலைவர் பாண்டியராஜன் ஆகிய நால்வரும் பிடிபட்டனர். அங்கிருந்து 6-ஆம் தேதி நள்ளிரவு கடந்து 1-15 மணிக்கு விருதுநகர் கொண்டுவரப்பட்டு,   விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு  அலுவலகத்தில் ராஜேந்திரபாலாஜி விசாரிக்கப்பட்டார். அவர் கார் டிக்கியில்  வைத்திருந்த 500 ரூபாய்,  2000 ரூபாய் கரன்ஸிக் கட்டுகள்  மற்றும் உடமைகள் கணக்கிடப்பட்டன.   விசாரணைக்குப் பிறகு, அதிகாலை 4-20 மணிக்கு ராஜேந்திரபாலாஜி மட்டும் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.

 

ஸ்ட்ரெங்த் காட்டவிடாமல் கைது நடவடிக்கை!

 

 Rajendrapalaji remanded for 15 days -The flow that came to an end!

 

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திரபாலாஜியைக்  கைது செய்ததால், விருதுநகர் மாவட்ட அதிமுகவினரால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடாது என்பது காவல்துறையினருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், கைதான ராஜேந்திரபாலாஜி கண்முன்னே, அவரை ஆதரித்து வாழ்த்து கோஷமும், ஆட்சிக்கு எதிரான ஒழிக கோஷமும் அதிமுகவினர் யாரும் எழுப்பிவிடக்கூடாதெனக் கறாராகச் செயல்பட்டனர்.  ஆனாலும்,  ‘மாவீரன் கே.டி.ஆர். வாழ்க!’ என, ராஜேந்திரபாலாஜி விருதுநகருக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன் சிலர் கோஷமிட்டதை, விருதுநகரில் கேட்க முடிந்தது.

 

 Rajendrapalaji remanded for 15 days -The flow that came to an end!

 

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு ராஜேந்திரபாலாஜியைக் கொண்டுவரும்போதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும், ஒரு ஸ்ட்ரெங்த் காட்டிவிட வேண்டுமென்று, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  ஏற்பாடு செய்திருந்தனர். இதையறிந்த  காவல்துறையினர்,   விருதுநகர் மாவட்ட எல்லைகளிலேயே அதிமுகவினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். ஆனாலும், காவல்துறையின் கண்ணில் படாமல் வேறு ரூட்டில் வந்து,  விருதுநகரிலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அதிமுக நிர்வாகிகள் சிலர் திரண்டனர்.  ‘இங்கே கூட்டம் போடக்கூடாது; கலைந்து போகவில்லையென்றால் கைது செய்வோம்..’ என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்க, “இது ஜனநாயக நாடுதானே! பொய் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகத்தானே ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்? 20 நாட்கள் கழித்து எங்கள் மாவட்ட செயலாளரின் முகத்தை நேரில் பார்க்கக்கூட விடமாட்டோம் என்று சொல்வது சர்வாதிகாரமாக இருக்கிறது.” என்று ராஜவர்மன் வாக்குவாதத்தில் ஈடுபட,  அவரோடு சேர்த்து 66 பேர் கைது செய்யப்பட்டு,  சூலக்கரை மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாகக் கூடிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

 

 Rajendrapalaji remanded for 15 days -The flow that came to an end!

 

ஒருவழியாக ராஜேந்திரபாலாஜியின் 20 நாள் ஓட்டம், காவல்துறையின் தேடுதல் வேட்டையால் முடிவுக்கு வந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.