Skip to main content

அடை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அகஸ்தியர் சிலை! - பக்தர்கள் வேண்டுகோள்!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

 rain flood ... Agasthiyar statue was blown away ...


தமிழ் வளர்த்த தவமுனி அகஸ்தியர், வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்து சமநிலை மாறிய புலன்களைச் சமன்படுத்தும் பொருட்டு சர்வேஸ்வரரான சிவபெருமானால் தென்புலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவர். சிவபெருமானின் ஆக்ஞைபடி தென்புலம் வந்த அகத்தியர் தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பொதிகையில் அமர்ந்தார். உலகம் சமனடைந்தது என்பது நம்பிக்கை.

 

அப்பேர்ப்பட்ட அகஸ்தியருக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பையின் பாபநாசம் மலையின் மேலுள்ள கல்யாண தீர்த்த மருகில் சிலை வைக்கப்பட்டது. அதனைபெயாட்டி கல்யாண தீர்த்தமும் உள்ளது. அருகே கொட்டும் சிற்றவிக்கு அகஸ்தியர் அருவி என்று பெயரும் வைக்கப்பட்டது.

 

மாதத்தில் வருகிற ஒவ்வொரு பௌர்ணமிக்கும், அகஸ்தியர் அருவியின் பக்கமுள்ள கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுடன் சிறப்பான பூஜையும் நடத்துவர். காரணம், இரவு நேரங்களில் சித்தர்கள் கூடி, குறிப்பாக பௌர்ணமி இரவில் அவர்கள் சுவாமி தரிசனம் செய்த ஆலயம் என்றும் கருதப்படுவதால், பௌர்ணமியின் போது இம்மலைக்கோவில் களைகட்டும். இங்கே தரிசனம் செய்யும் பக்தர்கள் அருகிலுள்ள அகஸ்தியரையும் வழிபடுவர்.

 

 rain flood ... Agasthiyar statue was blown away ...

 

ஜனவரி இரண்டாம் வாரம் பெய்த அடை மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. அதனால் பாபநாசம் அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி நிர் திறந்துவிடப்பட்டு வெள்ளம் பாய்ந்தது. அத்துடன் மழை பொழிவின் காட்டாற்று வெள்ளமும் சேர, திகுடு முகடான வெள்ளம் பாய்ந்து கொட்டியதால், கல்யாண தீர்த்தமருகிலுள்ள கோடிலிங்கேஸ்வரரின் கோவில் சுற்றுச் சுவர் பகுதி இடிந்து சேதமடைந்திருக்கிறது. ஆலயத்தின் முன் பகுதியிலுள்ள உலோபாமுத்திர சமேத அகஸ்தியர் சிலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மலைக் கோவிலின் படிகளும் சேதமடைந்ததால் நேற்றைய பௌர்ணமி பூஜைக்குப் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

 

சரித்திரச் சிறப்புகொண்ட இக்கோயிலின் நடைப்பாதை வளாகம் சீரமைக்கப்பட வேண்டும், அகஸ்திய முனிவரின் சிலையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.