Skip to main content

"என்னை அவர்களால் தொடமுடியாது" - ராகுல் காந்தி!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

rahul gandhi

 

மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களான, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தனிவிமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு வந்து சேர்ந்து, தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

 

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்றும், தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தொடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பேசியது வருமாறு:

 

"இந்தியாவில் மக்களவை, சட்ட சபைகள், பஞ்சாயத்துகள், நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் உள்ளிட்ட நிறுவனங்கள், தேசத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நிறுவனங்கள் அனைத்திலும் தாக்குதலை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று உங்களுக்குச் சொல்ல வருத்தமாக இருக்கிறது. அது இறந்துவிட்டது. ஏனெனில் ஆர்எஸ்எஸ் எனும் அமைப்பு, நிறுவன சமநிலையில் ஊடுருவி தொந்தரவு செய்யவும் அழிக்கவும் பெரும் நிதியைக் கொண்டுள்ளது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து தேசத்தை உருவாக்குகின்றன. நாட்டின் நிறுவன சமநிலையை நீங்கள் அழிக்கும்போது, மாநிலங்களுக்கிடையிலான உடன்பாட்டையும் அழிக்கிறீர்கள். எல்லா மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பு இல்லை என்றால், அந்த மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலை அழிக்கப்படும். அது எந்த நாட்டிற்கும் கடுமையான பிரச்சினையாகும். இதைத்தான் நாம் எதிர்கொள்கிறோம். ராஜஸ்தானில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வீசப்பட்ட பணத்தின் அளவு எனக்குத் தெரியும்.

 

ஒருபுறம், நீங்கள் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளீர்கள், நிதி மற்றும் ஊடகங்களில் ஏகபோகத்தைக் கொண்டுள்ளீர்கள். மறுபுறம் கட்சிகளை உங்களோடு போட்டியிட அனுமதிப்பதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, அவர்கள் அரசை அமைக்கும்போது அது அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது எங்கே செல்கிறது? ஒரு அரசியல் தலைவராக, ஒரு ஜனநாயகத்தில், எனக்கு நிறுவன ஆதரவு, ஊடகம், தீவிரமான நீதித்துறை, பாராளுமன்றத்தில் பேசும் திறன் ஆகியவை தேவை. அவை அனைத்தும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இது எங்கே செல்கிறது? வெகுஜன நடவடிக்கை மூலம் இதைத் தீர்ப்பதற்கு ஒரே ஒருவழி இருக்கிறது. சாதாரண மக்கள், இந்த நாடு அவர்களது ஆணைப்படி அல்ல, பலவந்தத்தால் ஆளப்படுகிறது என அறியும்போது நடவடிக்கையில் இறங்குவார்கள். டெல்லி எல்லையில் அதன் தொடக்கத்தைக் காணலாம்.

 

தற்போது, இந்தியா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியது போன்ற ஒரு நிலைக்குள், நுழைகிறது. இந்த கட்டத்தில், ஜனநாயகத்தைக் காக்க நிறுவனங்களைச் சார்ந்திருக்க முடியாது. மக்களைத்தான் சார்ந்திருக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை கேள்வி கேட்கும், சவால் விடும் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நான் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னை அச்சுறுத்த அவர்களிடம் எதுவுமில்லை. ஏனென்றால் எனது முழு அரசியல் வாழ்க்கையிலும், ஒரு நேர்மையான நபராக இருக்க எனக்கு நல்ல புத்தி இருந்தது. அதனால், அவர்களால் என்னைத் தொட முடியாது. அதனால்தான் நான் உங்களிடம் பேச முடியும், ஏனெனில் எந்த அமலாக்கத்துறையும், சிபிஐயும் என்னை பாதிக்காது. அதனால்தான் பாஜக என்னை 24*7 தாக்குகிறது. ஏனென்றால் இந்த மனிதன் ஊழலற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். சி.ஏ.ஏ. பாரபட்சமானது என்று நாங்கள் கருதுகிறோம், நாங்கள் அதை ஏற்கவில்லை, நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. இந்த நாட்டில் மதச்சார்பின்மை மீது முழு அளவிலான தாக்குதல் உள்ளது, ஆர்.எஸ்.எஸ் & பாஜக அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குகின்றன. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடித்தளமாகும், எனவே இது நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு மீதான தாக்குதலாகும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.