Skip to main content

"என்னை அவர்களால் தொடமுடியாது" - ராகுல் காந்தி!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

rahul gandhi

 

மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களான, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தனிவிமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு வந்து சேர்ந்து, தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

 

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்றும், தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தொடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பேசியது வருமாறு:

 

"இந்தியாவில் மக்களவை, சட்ட சபைகள், பஞ்சாயத்துகள், நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் உள்ளிட்ட நிறுவனங்கள், தேசத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நிறுவனங்கள் அனைத்திலும் தாக்குதலை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று உங்களுக்குச் சொல்ல வருத்தமாக இருக்கிறது. அது இறந்துவிட்டது. ஏனெனில் ஆர்எஸ்எஸ் எனும் அமைப்பு, நிறுவன சமநிலையில் ஊடுருவி தொந்தரவு செய்யவும் அழிக்கவும் பெரும் நிதியைக் கொண்டுள்ளது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து தேசத்தை உருவாக்குகின்றன. நாட்டின் நிறுவன சமநிலையை நீங்கள் அழிக்கும்போது, மாநிலங்களுக்கிடையிலான உடன்பாட்டையும் அழிக்கிறீர்கள். எல்லா மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பு இல்லை என்றால், அந்த மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலை அழிக்கப்படும். அது எந்த நாட்டிற்கும் கடுமையான பிரச்சினையாகும். இதைத்தான் நாம் எதிர்கொள்கிறோம். ராஜஸ்தானில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வீசப்பட்ட பணத்தின் அளவு எனக்குத் தெரியும்.

 

ஒருபுறம், நீங்கள் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளீர்கள், நிதி மற்றும் ஊடகங்களில் ஏகபோகத்தைக் கொண்டுள்ளீர்கள். மறுபுறம் கட்சிகளை உங்களோடு போட்டியிட அனுமதிப்பதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, அவர்கள் அரசை அமைக்கும்போது அது அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது எங்கே செல்கிறது? ஒரு அரசியல் தலைவராக, ஒரு ஜனநாயகத்தில், எனக்கு நிறுவன ஆதரவு, ஊடகம், தீவிரமான நீதித்துறை, பாராளுமன்றத்தில் பேசும் திறன் ஆகியவை தேவை. அவை அனைத்தும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இது எங்கே செல்கிறது? வெகுஜன நடவடிக்கை மூலம் இதைத் தீர்ப்பதற்கு ஒரே ஒருவழி இருக்கிறது. சாதாரண மக்கள், இந்த நாடு அவர்களது ஆணைப்படி அல்ல, பலவந்தத்தால் ஆளப்படுகிறது என அறியும்போது நடவடிக்கையில் இறங்குவார்கள். டெல்லி எல்லையில் அதன் தொடக்கத்தைக் காணலாம்.

 

தற்போது, இந்தியா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியது போன்ற ஒரு நிலைக்குள், நுழைகிறது. இந்த கட்டத்தில், ஜனநாயகத்தைக் காக்க நிறுவனங்களைச் சார்ந்திருக்க முடியாது. மக்களைத்தான் சார்ந்திருக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை கேள்வி கேட்கும், சவால் விடும் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நான் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னை அச்சுறுத்த அவர்களிடம் எதுவுமில்லை. ஏனென்றால் எனது முழு அரசியல் வாழ்க்கையிலும், ஒரு நேர்மையான நபராக இருக்க எனக்கு நல்ல புத்தி இருந்தது. அதனால், அவர்களால் என்னைத் தொட முடியாது. அதனால்தான் நான் உங்களிடம் பேச முடியும், ஏனெனில் எந்த அமலாக்கத்துறையும், சிபிஐயும் என்னை பாதிக்காது. அதனால்தான் பாஜக என்னை 24*7 தாக்குகிறது. ஏனென்றால் இந்த மனிதன் ஊழலற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். சி.ஏ.ஏ. பாரபட்சமானது என்று நாங்கள் கருதுகிறோம், நாங்கள் அதை ஏற்கவில்லை, நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. இந்த நாட்டில் மதச்சார்பின்மை மீது முழு அளவிலான தாக்குதல் உள்ளது, ஆர்.எஸ்.எஸ் & பாஜக அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குகின்றன. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடித்தளமாகும், எனவே இது நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு மீதான தாக்குதலாகும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.