Skip to main content

 வங்கி ஊழியர் மாரிமுத்துவை  கொன்றவர்கள் யார்? 6 நாட்களாக அதிகாரிகள் புகார் கொடுக்காதது ஏன்? 

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 


    புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளராக இருந்த திருக்கட்டளை மாரிமுத்து கடந்த மாதம் 28 ந் தேதி மாலை முதல் காணவில்லை. 29 ந் தேதி அவரது கார் திருவரங்குளம் அருகே தைலமரக்காட்டில் எரிந்து கிடந்தது. காருக்குள் கவரிங் நகைகளும், கணினி பொருட்களும் எரிந்து கிடந்தது. அந்த காரை பார்த்த அவரது மனைவி ராணி அது மாரிமுத்துவின் கார் தான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார்.


    அதன் பிறகு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் காணவில்லை என்று தகவல்கள் வெளியானது. ஆனால் 6 நாட்கள் வரை புகார் கொடுக்கவில்லை. 

 

m

 

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு 90 கி.மீ தள்ளி மணமேல்குடி கோடியக்கரை கடலில் ஒரு அழுகிய ஆண் சடலம் கரை ஒதுங்கியதை பார்த்து அது மாரிமுத்துவாக இருக்கலாமா என்ற சந்தேகத்தில் அவரது மனைவி ராணியை அழைத்துச் சென்று அந்த சடலத்தில் கிடந்த சட்டையை காட்டிய போது அது மாரிமுத்துவின் சடலம் தான் என்று கதறி அழுதார் ராணி. அப்போதே.. காணாமல் போன நாளில் இரவில் என்னிடம் போனில் பேசினார். நான் உங்களை நல்லா வச்சிக்கல.. நான் இனி வரமாட்டேன்னு சொன்னார். ஆனால் அருகில் யாரோ இருந்து கொண்டு அவரை அப்படி பேச வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அவரது செல்போன் வேலை செய்யவில்லை. அதனால் யாரோ திட்டமிட்டு என் கணவரை கொலை செய்திருக்கிறார்கள் என்றார்.


    இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு வங்கி முதுநிலை மேலாளர் மாரீஸ் கண்ணன் கொடுத்த புகாரில்.. வாடிக்கையாளர்களிடம் அடகு வாங்கிய நகைகள் 13.75 கிலோ வை இறந்த மாரிமுத்து எடுத்து சென்றுவிட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தான் வாடிக்கையாளர்கள் வங்கியில் முற்றுகையிட்டு எங்கள் நகைகள் வேண்டும்  என்று கேட்கும் போது பணம் தருவோம் என்று பதில் சொல்லி அனுப்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிய இழப்பை சந்திக்க உள்ளனர்.

 

m


    தொடர்ந்து டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 2013 ம் ஆண்டு முதல் நகைகள் திருடப்பட்டு வந்தது தெரியும். ஆனால் நகை பாக்கெட்டுகள் இருந்தது. அதனால் உரசிப் பார்க்கவில்லை. அது போலி நகைகள் என்றது தெரிகிறது. எல்லாமே இறந்த மாரிமுத்து தான் செய்திருக்க வேண்டும் என்று முதல் கட்ட விசானையில் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் தான் மாரிமுத்து இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் இருந்த நிலையில். வங்கி நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள மாரிமுத்துவை கொன்று கடலில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தை நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.


அதே போல சடலம் கிடந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் உள்ள எழும்புகள் உடைந்திருப்பதை ஆய்வு குழுவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் மாரிமுத்துவின் இறப்பு எப்படி நடந்தது என்பதை அறிய உடல் உறுப்புகள் ரசாயன சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் சோதனையில் கொலை என்பதை உறுதிப்படுத்தி இருப்பதால் போலிசார் இனி மாரிமுத்துவை கொலை செய்தது யார்? நகைகளை திருடியது யார், எதற்காக மாரிமுத்து கொலை செய்யப்பட்டார் என்ற பல கோணங்களிலும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியுள்ளது. 
            

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கியில் ரூ. 3,600 கோடி கடன் வாங்கியதில் மோசடி செய்த பிரபல நிறுவனம்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

pnb complaints dhfl to rbi

 

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனம் ரூ. 3,688.58 கோடி கடன் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் சார்பில், ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

 

DHFL நிறுவனத்திற்கு நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் பேங்க் மும்பையில் உள்ள கார்ப்பரேட் கிளை மூலம் கடன் கொடுத்துள்ளது. இதில் அந்நிறுவனத்தின் செயல்படாத சொத்து கணக்கின் மூலம் மோசடி நடந்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ஒரு லட்சம் கோடி அளவிலான கடன்களை பல்வேறு வங்கிகளில் பெற்றுள்ள DHFL நிறுவனம்,  அந்த வங்கிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

மோசடியின் அளவையும் கண்டறியும் வகையில், அதிகாரிகள் அந்நிறுவனத்தின் ஆவணங்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளும், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸின் கணக்குகளில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது மிகப்பெரிய மோசடி இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் நகை வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.11,300 கோடி மோசடியில் பஞ்சாப் நேஷனல் பேங்க் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

3 முறை தோல்வி 4- வது முறை 5 கோடி, 5- வது முறை 13 கோடி... வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கடந்த 2- ஆம் தேதி அதிகாலை நகைக்கொள்ளையில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்ததில் முருகன் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய கூட்டாளிகளை தொடர்ச்சியான கைதுக்கு, பிறகு அவன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.

 

இந்த நிலையில் பெங்களூரில் இருந்த முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து நகைகளை மீட்டு, பெரம்பலூரில் வைத்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வருடம் ஆரம்பத்தில் ஜனவரி மாதம் உப்பியபுரத்தில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி, அதை அடுத்து கடந்த 18- ஆம் தேதி மண்ணச்சநல்லூர் மத்திய கூட்டுறவு வங்கி கொள்ளையடிக்க முயற்சி, கடந்த 21- ஆம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள பஞ்சாப் வங்கியில்  கடன் வழங்கும் நிதியை கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருந்தாதாலும், லாக்கர்களை உடைக்க முடியாததாலும் வங்கிகளை கொள்ளையடிக்க முடியவில்லை. இதையெல்லாம் பாடமாக வைத்து தான், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கரெக்டாக அடித்து விட்டோம்.

trichy lalithaa jewellery thief murugan team welding ganesh

 

எல்லா வங்கி கொள்ளை முயற்சியும் தொடர் விடுறை இருப்பதை கணக்கில் வைத்து தான்.. கொள்ளையடிக்க திட்டமிட்டோம். முதல் 3 வங்கியில் முயற்சி தோல்வி அடைந்தது. 4- வது இந்த வங்கியில் மாடியில் துளையிட்டுதான் உள்ளே இறங்கி கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி கொள்ளையடித்தோம். மொத்தம் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே லாக்கரில் மட்டும் 100 பவுன் நகைகள் இருந்தது. எங்களுக்கு வெல்டிங் பண்ண ராதாகிருஷணன், நான், சுரேஷ், மற்றும் கணேஷன் ஆகியோர் பண்ணினோம் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

trichy lalithaa jewellery thief murugan team welding ganesh

 

இந்த நிலையில் திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது..  லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனை திண்டுக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்துள்ளோம் என்றார்.