Skip to main content

துப்பாக்கி குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்

Published on 14/05/2019 | Edited on 14/05/2019


 
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா, திருக்கட்டளையை சேர்ந்த ராஜேந்திரன் (40)  தனது நண்பருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஒற்றைகுழல் துப்பாக்கியால் 11 ம் தேதி மாலை 4  மணிக்கு சுடப்பட்டார். இதில், ராசேந்திரனின் இடது காலில்  குண்டு பாய்ந்து  தசையை ஊடுருவி கால் எலும்பிற்கு பக்கத்தில் இருந்தது.

 

m


 எக்ஸ்ரே மூலம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கி குண்டை அகற்ற முயற்சித்தனர். அது ஆழமாக பதிந்துள்ள நிலையில் அகற்றுவது சிக்கலாக இருந்ததால் எம்.ஆர்.ஐ. அதிநவீன கருவி மூலம் துப்பாக்கி குண்டு இருந்த இடத்தை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த இரு குண்டுகளை அகற்றினர்.  


    இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் அழ.மீனாட்சிசுந்தரம் கூறும் போது..  11 - ம் தேதி மாலை சுடப்பட்ட ராஜேந்திரன் 12 ம் தேதி நள்ளிரவு 12  மணிக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அனுமதிக்கப்பட்ட ஐந்தரை  மணிநேரத்தில் அவருக்கு தேவையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்டன.


    துப்பாக்கிக் குண்டுகள் உடல் திசுக்களின் வழியே நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் அதை அகற்றுவது சவாலானது. எம்.ஆர்.ஐ. என்னும் அதிநவீன கருவி மூலம் உடனுக்குடன் எக்ஸ்ரே எடுப்பது போல் கண்காணிக்க முடியும். துப்பாக்கி குண்டு போன்ற உலோக பொருட்கள் நகர்வதையும் இக்கருவி மூலம் கண்டறியலாம். எலும்புகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் இக்கருவிமூலம் துப்பாக்கிக் குண்டு இயக்கத்தை கண்டறிந்த எலும்பு மருத்துவர்கள் ராஜ்மோகன், சங்கர் மற்றும் மயக்க மருத்துவர் ரவிக்குமார் ஆகியோர் அகற்றியது பாராட்டத்தக்கது என்றார். 


    துப்பாக்கியால் சுட்ட நபரை வல்லத்திராகோட்டை போலிசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
            

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.