Skip to main content

கோட்டை விட்டது புதுக்கோட்டை போலீஸ்; சுருட்டி அள்ளியது சாக்கோட்டை போலீஸ்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

Pudukottai police have left the; Chakota police rolled up

 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா கடத்தும் கும்பல் வெளி மாவட்டங்களில் விலை உயர்ந்த பைக்குகளை திருடி வந்து சில முறை கடத்தலுக்கு பயன்படுத்திவிட்டு பழைய இரும்பு வியாபாரிகளிடமும், காஸ்ட்லியான பைக் ஓட்ட ஆசைப்படும் இளைஞர்களிடமும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு மீண்டும் வேறு நல்ல பைக்குகளை திருடிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பெயர் 10 ஆயிரம் ரூபாய் பைக்.

 

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஒரு பைக் திருட்டுப் போன சம்பவத்தில் அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவில் காணாமல்போன அந்த பைக்கை ஒரு நபர் ஓட்டிச் செல்வது தெளிவாக தெரிகிறது. அந்தப் படம் மாவட்டம் முழுவதும் உள்ள குற்றப்பிரிவு போலிசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடையாளம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் பற்றி குற்றப்பிரிவில் உள்ள யாரும் அடையாளம் காண முடியவில்லை.

 

அதேநேரம் சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான பைக்குகள் திருட்டுப் போவதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 29ந் தேதி மாலை 3.56 மணிக்கு காணாமல் போன ஒரு பைக்கில் இருவர் செல்லும் சிசிடிவி பதிவை வைத்து அவர்கள் யார் என்பதை கண்டறிய சாக்கோட்டை போலீசார் தீவிரமாக எடுத்த முயற்சி பலன் கொடுத்தது.

 

Pudukottai police have left the; Chakota police rolled up

 

புதுக்கோட்டை போலிசாரின் சிசிடிவி பதிவில் சிக்கியிருந்த அதே நபர் தான் சாக்கோட்டை சிசிடிவியிலும் சிக்கி இருந்தார். புதுக்கோட்டை போலீசார் மெத்தனமாக இருந்ததால் பைக் திருடனை கோட்டைவிட்ட நிலையில், சற்று சுதாரித்துக் கொண்ட சாக்கோட்டை போலீசார் சிசிடிவில் சிக்கிய திருடனையும் அவனது நெட்ஒர்க்கையும் கொத்தாக சுருட்டி வளைத்து பிடித்துள்ளனர்.

 

இரு சிசிடிவி பதிவிலும் சிக்கியிருந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி விற்று சிக்கிய கொத்தமங்கலம் கண்ணன். கோட்டைப்பட்டினம் சிசிடிவியில் சிக்கியதும் அதே கொத்தமங்கலம் கண்ணனும் கீரமங்கலம் அண்ணாநகர் கணேசனும் தான். புதுக்கோட்டை போலீசார் தங்களின் குற்றப்பட்டியலில் உள்ள நபரை அடையாளம் காண முடியாத நிலையில் சாக்கோட்டை போலீசார் அடையாளம் கண்டு தூக்கி வந்து விசாரித்த போது மேலும் சிலரையும் தூக்கியதுடன் அவர்கள் திருடி விற்ற சுமார் 450 பைக்குகளையும் மீட்டுள்ளனர்.

 

சாக்கோட்டை போலீசார் தூக்கிய பிறகு இப்போது தான் புதுக்கோட்டை போலீசாருக்கும் நினைவுக்கு வந்துள்ளது நமக்கு அருகில் இருந்த திருடனை கோட்டை விட்டு விட்டோமே என்று. விரைவில் புதுக்கோட்டை போலீசார் மேலும் உள்ள பைக் திருட்டு கும்பலை பிடிக்கத் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.