Skip to main content

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட காப்பீட்டு அடையாள அட்டைகள்! உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல்!!!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

Pudukkottai incident -Insurance ID cards buried in the soil

 

ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படக் கூடாது என்பதற்காக மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை கடந்த தி.மு.க ஆட்சியில் தொடங்கி தற்போதைய அ.தி.மு.க ஆட்சி வரை தொடர்கிறது. காப்பீட்டு அடையாள அட்டை இருந்தால் சிகிச்சை செலவுகளை அரசு செலுத்திவிடுகிறது. இந்த திட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர். ஆனால் பல கிராமங்களில் இந்த அடையாள அட்டை கிடைக்காமல் கடன் வாங்கி, சொத்து வித்து சிகிச்சை பெற்றுள்ளனர். பலர் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துவிட்டனர் என்பது வேதனையாகவும் உள்ளது.

 

Pudukkottai incident -Insurance ID cards buried in the soil


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊரட்சியில் உள்ளது ஆண்டவராயபுரம் கிராமம். அந்த கிராமத்தில் அணவயல் கிராமத்தை தேர்ந்த அமிர்தமாஜ் என்பவரின் தோட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு நேற்று உழவு செய்யும் போது மண்ணுக்குள் இருந்து விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வெளிவரத் தொடங்கியது. தகவல் அறிந்து அப்பகுதியில் இளைஞர்கள் பலரும் கூடிநின்று அப்பகுதியை தோண்டிப் பார்த்த போது அந்தப் பகுதி மக்களின் காப்பீட்டு அட்டைகள் புதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து உடனடியாக வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனா்.

அடுத்த நாள் ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி, கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்ட விரிவான காப்பீட்டு அட்டைகளை சேகரித்ததுடன் அப்பகு பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் எழுதி வாங்கிக் கொண்டனர். 

 

Pudukkottai incident -Insurance ID cards buried in the soil



அப்போது அங்கு வந்த ஒரு பெண், எனக்கு போன வருசம் இதய அறுவை சிகிச்சை செய்யும்போது காப்பீட்டு அட்டை கேட்டார்கள். நாங்களும் கேட்டுப்பார்த்தோம் கிடைக்கவில்லை. அதனால் ரூ. 4.5 லட்சம் கடன் வாங்கி பணம் கட்டி ஆபரேசன் செஞ்சு வந்திருக்கிறேன். இப்ப மறுபடியும் வரச் சொன்னாங்க போக வழியில்லை. அதனால் போகல. ஆனால் இந்த மண்ணில் புதைக்கப்பட்ட அட்டைகளில் எனது அட்டையும் உள்ளது. இந்த அட்டை இருந்திருந்தால் என் சிகிச்சை செலவு குறைந்திருக்கும் கடன் வாங்கி இருக்கமாட்டோம். தினக் கூலி வேலை செய்து கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம். அதனால் எனக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஏழை பெண் குடும்பத்துடன் கண்ணீரோடு தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தார்.


அதேபோல அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது, இதே போல பலர் காப்பீட்டு அட்டை இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கடனாளியாகி உள்ளனர். சிலர் சிகிச்சை செய்ய வழியில்லாமல் இறந்தும் உள்ளனர். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள அத்தனை பேரின் காப்பீட்டு அடையாள அட்டையும் இப்படி மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட இடம் முன்பு தைலமரக் காடாக இருந்ததால் அந்த காட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். 

அது இப்போது தைலமரக்காடு அழித்து விவசாயம் செய்யும்போது புதையல் போல வெளி வருகிறது. இந்த செயலை செய்த நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

யாரோ ஊராட்சி நிர்வாகத்தில் பணியாற்றியவரோ, வருவாய் துறையில் பணியாற்றியவரோதான் இப்படியான ஈனச் செயலை செய்திருக்கிறார். அவர்களை பற்றிய தகவல் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் ஏனோ நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்.

        
 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.