Skip to main content

பிரசவித்த பெண்ணுக்குக் கரோனா.. அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

pudukkottai district government hospital coronavirus doctors

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 400 குழந்தைகள் வரை பிரசவமாகிறது. பல வருடங்களாக சிசு மரணம் இல்லாத மருத்துவமனை என்ற சிறப்பும் இம்மருத்துவமனைக்கு உள்ளது.

 

இந்த மருத்துவமனையில் குழந்தைகள் வார்டுக்கு 20 மீட்டர் தூரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா வார்டு அமைக்கப்பட்டு 18 பேரை அனுமதித்தனர். குழந்தைகளைப் பாதிக்கும் அதனால் கரோனா வார்டை மாற்ற வேண்டும் என்று இரவிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

 

அடுத்த நாளே கரோனா வார்டில் இருந்தவர்கள் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அதன் பிறகும் அதே பகுதியில் கரோனா வார்டு அமைக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் குழந்தை வார்டுக்கு அருகில் வைக்க வேண்டாம் என்று தான் கோருகிறோம் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். 

 

அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதிகாரிகள் கரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டும் தங்க வைத்துப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சமாதானம் கூறப்பட்டது. இந்த நிலையில் அறந்தாங்கி மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அறந்தாங்கி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (15/07/2020) அறந்தாங்கி வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், பிரசவத்திற்காக வந்த போது அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் (16/07/2020) இரவு அந்த கர்ப்பிணிக்கு பிரவச வலி ஏற்பட்டதால் வியாழக்கிழமை இரவு மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். 

 

நேற்று (17/07/2020) கரோனா பரிசோதனை முடிவு வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் (16/07/2020) இரவு பிரவசம் பார்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை வட்டாரமே அதிர்ச்சியடைந்தது. உடனடியாக வார்டு பகுதியில் மருந்து தெளிக்கப்பட்டாலும் 50- க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளுடன் இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

http://onelink.to/nknapp

 

மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிரசவித்த பெண்ணை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையறிந்த அறந்தாங்கி நகர மக்கள் இப்படி ஒரு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதால்தான் கரோனா வார்டு வேண்டாம் என்று சொன்னோம் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.