Skip to main content

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் மறியல்!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமாரும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் மற்றும் 9  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரை பிரிக்கப்பட்டு முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
 

puducherry issue


காமராஜ் நகர் தொகுதியை பொருத்தவரை 11 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 35,009 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17,047 பேர் ஆண்கள். 17, 961 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினம். வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக 21 இடங்களில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்துள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, நிழற்பந்தல், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வி.வி.பாட் எந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடிகள் அனைத்தும் வலைதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது துணை ராணுவ படையினர் மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 7 வாக்குச்சாவடிகள்  பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
 

puducherry issue


தேர்தலையொட்டி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க புதுவை மாநிலத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 24-ஆம் தேதி அன்றும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு,  லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. பின்னர் வருகிற 24-ஆம் தேதி அங்கிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது

இதனிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 27,000 ரூபாய் மற்றும் பணத்தை வைத்திருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பவுன்பேட்டை வேலு என்பவர் கைது செய்யப்பட்டார். அதேசமயம் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் தீபாவளி பரிசு என்ற பெயரில் வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய்க்கான டோக்கன் வழங்குவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் கருவடிக்குப்பம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் சமரசம் செய்து கலைத்தனர்.

பின்னர் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் சாய்பாபா படம் பொறித்த டோக்கன் வாக்காளர்களுக்கு வழங்கியதை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.