Skip to main content

புதுவை சட்டசபையில் எதிரொலித்த கந்தசஷ்டி கவசம் விவகாரம் - நாராயணசாமி பதில்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

puducherry cm replies to question on kandasasti kavasam and karuppar kootam

 

"கந்தசஷ்டி கவசம் விஷயத்தில் யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

 

கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் முருகனுக்காகப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் செந்தில்வாசன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதன் தொகுப்பாளர் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுப்பிய நிலையில் அவர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்த சூழ்நிலையில் அவரை புதுச்சேரிக்கு வந்து அழைத்துச் சென்றனர். 

 

இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பாரதிய ஜனதா கட்சியினர் சுரேந்தர் எந்தவித அனுமதியும் இன்றி புதுச்சேரிக்கு வந்தது, கூட்டம் கூட்டியது, முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட புகார்கள் அளித்ததன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த விவகாரமானது இன்று (24.06.2020) சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இதனைக் கண்டிக்காத முதலமைச்சர் குறித்து பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

 

அதற்குப்  பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, "கந்தசஷ்டி கவசம் விஷயத்தில் யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் எல்லா மதத்தினரையும் நேசிப்பவன். இந்து விரோதி இல்லை. அதனால் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்"  என அவையில் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.