Skip to main content

குடிநீர் குழாய் இணைப்புகளைத் துண்டிக்க வந்த அதிகாரிகள்; பொதுமக்கள் போராட்டம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Public struggle against the officials who came to disconnect the water pipelines

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அடுத்த தில்லை நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. நிலம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலமாகும். ஒரு சில வீடுகள் மட்டுமே பட்டா நிலத்தில் அமைந்துள்ளது. கோயில் நிலத்தில் குடியிருக்கும் பொது மக்களின் வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருந்த நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் தற்காலிகமாக அந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. 

 

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளைத் துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர். அதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கரூர் - ஈசநத்தம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பாட்டிலுடன் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் நிலத்தில் குடியிருக்கும் அனைவரும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய வரி கட்டி வருவதாகவும், குடிநீர் பிரச்சனையில் தவித்து வந்த தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இணைப்புகளையும் துண்டிப்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சக மாணவரின் கழுத்தை அறுத்தவர் கைது! ஓடும் பேருந்தில் கொடூரம்! 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

karur district kulithalai engineering student arrested by police

 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில், திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன்  நித்தீஷ் குமார்(21), இ.சி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை எனும் மாணவர் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 

இருவரும் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இருவருக்கும் கூடா நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நிதீஷ் குமார், அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று வந்த இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால், நிதீஷ் குமார் அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார்.

 

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அண்ணாமலை முசிறி பார்வதிபுரத்தில் உள்ள நிதிஷ்குமார் வீட்டிற்கு சென்று பலமுறை சமாதானத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நிதிஷ்குமார் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கல்லூரி என்பதால் வழக்கம்போல கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலம் அருகே பேருந்து வந்தபோது திடீரென அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனை பார்த்த சக மாணவ மாணவிகள் அலறி அடித்து சத்தம் போட்டனர். இதனை அடுத்து கல்லூரி பேருந்து நிறுத்தப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் நித்தீஷ் குமாரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து,  முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஜினியர் மாணவர் அண்ணாமலையை கைது செய்த குளித்தலை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் கூடா நட்பு இருந்த விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து குளித்தலை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

30 போலீசாருடன் எஸ்.பி. நடத்திய வேட்டை; கரூரில் பரபரப்பு! 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

SP With 30 police in gutka operation

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி பிரபாகரன் நேரடியாக மளிகைக் கடைகள் மற்றும் தேநீர் கடைகளுக்குள் சென்று சல்லடை போட்டு, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த கடைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தார். 

 

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மூலம் பூட்டு போட்டு மாவட்ட எஸ்.பி பிரபாகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றில் நடந்த சோதனையில் ஒரே ஒரு பாக்கெட் மட்டும் கிடைத்த நிலையில், அந்த கடையின் உரிமையாளர் அபிலாசன் என்பவரை எஸ்.பி உத்தரவின் பேரில், கரூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 

SP With 30 police in gutka operation

 

மாவட்டம் முழுவதும் 8 தாலுகாக்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய 8 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளதாகவும், அந்த குழு தொடர் ஆய்வில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் ஆய்வின் போது எஸ்.பி பிரபாகர் தெரிவித்தார். இந்த அதிரடி ஆய்வின்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இரண்டு அதிவிரைவு படை போலீசார் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அதிரடி ஆய்வின் காரணமாக கரூர் மாநகராட்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்