Public paying homage to vivek by sapling

Advertisment

திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நடிகரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ விவேக்கிற்கு திருவாரூரில் பல்வேறு தரப்பினரும் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர்.

பிரபல நடிகரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ விவேக், கடந்த 17ஆம் தேதி அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகில் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Public paying homage to vivek by sapling

Advertisment

திருவாரூரில் ‘வனம்’ தன்னார்வ அமைப்பின் சார்பில் திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகில் பத்மஸ்ரீ நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நட்டனர். அதேபோல திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல இயக்கங்கள் இணைந்து நடிகர் விவேக்கிற்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். அதேபோல திருவாரூர் அருகே அலிவலம் பகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு, கூண்டு அமைத்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல பொதுமக்கள் பலரும் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.