Skip to main content

விவசாய விளைபொருட்கள் உற்பத்தியைக் கேள்விக் குறியாக்குவதா? தங்க சண்முக சுந்தரம் கண்டனம்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

Thanga. Shanmuga Sundaram


''குடகு மலையில் தோன்றி கர்நாடகத்திலிருந்து 736 கி.மீ தூரம் பயணித்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக விவசாயிகளைக் காப்பாற்றி விவசாயம் செழிக்க உதவியது. 1956 கணக்கீட்டின் படி தமிழகத்தில் 22.77 இலட்சம் ஏக்கரும் கர்நாடகாவில் 4.93 இலட்சம் ஏக்கரும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. 
 


2020 ல் 18 இலட்சம் ஏக்கர் கூடுதலாகி கர்நாடகா 22 இலட்சம் ஏக்கரில் சாகுபடி உயர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ கர்நாடகா தண்ணீர் தர முரண்டு பிடித்துவருவதால் 5.77 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் குறைந்து 17 இலட்சம் ஏக்கராக குறைந்து போய் உள்ளது என்பது பலரும் அறியாத செய்தியாக உள்ளது வேதனைக்குரியது. 
 

விவசாயத் தொழில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கட்டுப்படியான விலை இல்லாமலும் ஆட்கள் கிடைக்காமலும் விவசாயத் தொழில் செய்வதை இளைஞர்கள் பலரும் ஏளனமாக நினைப்பதாலும் விவசாயப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இலவச மின்சாரம் ரத்து என்பது உணவுப் பொருள் உற்பத்தியைக் கேள்விக்குறியாக்கி விடும். விவசாயிகள் ஏரிக்குளங்களைக் கால்வாய்களைத் தூர்வார போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 
 


மாறாக  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு வேண்டி 4.25 இலட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை. அதற்குப் பதிலாக விவசாயிகளை ஒடுக்குவதற்கு இலவச மின்சார ரத்து செய்யும் திட்டத்தை முன்னெடுப்பது வேதனைக்குரிய செய்தி ஆகும். கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி விவசாயிகளை வஞ்சிக்கும் முன்னெடுப்பை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகளைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் செய்யத் தயாராக உள்ளனர்'' என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

33 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராம மக்கள்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers without electricity for 33 years

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்

அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

வெடித்துச் சிதறிய மின் வயர்கள்! - பயங்கர விபத்து தடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Exploded electrical wires! Terrible accident prevention!

 

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், இரண்டாவது வார்டு பிரதான சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பத்தில் உள்ள வயர்கள் பட்டாசு போல் வெடித்துச் சிதறியது. குடியிருப்பின் வாசல் அருகே இருந்த மின்கம்பத்தில் தீவிபத்து ஏற்பட்டு வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தச் சத்தம் கேட்டு, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். 

 

சுமார் அரை மணி நேரமாகத் தொடர்ந்து பட்டாசு தீப்பொறி பறப்பது போல் தீயானது மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து அருகே உள்ளவர்கள் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த தீ விபத்து கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் மின்கம்பத்தில் இருந்த வயர்கள் தொடர்ந்து எரிந்து வந்தன. இதனை அங்கிருந்த பொதுமக்கள் மணலைக் கொண்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். 

 

இந்த தீவிபத்து காரணமாக பூவிருந்தவல்லி இரண்டாவது வார்டு முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு மத்தியில் நடைபெற்ற இந்த மின் விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.