Skip to main content

"இது அரசு விழாவா? அதிமுக விழாவா?" - எம்.எல்.ஏ கேள்வியால் பரபரப்பான அரசு நிகழ்ச்சி!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

Problem between admk  and dmk in kanyakumari

 

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று (16.02.2021) குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தக்கலை, குருந்தன்கோடு மற்றும் திருவட்டார் ஒன்றியங்களைச் சேர்ந்த 1,776 பயனாளிகளுக்கும் சேர்த்து 14 கிலோ தங்கம் மற்றும் 7 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகை மற்றும் உதவித் தொகை வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், அதில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்கு கலந்து கொண்டிருந்த அதிமுக மா.செ.க்கள் அசோகன் மற்றும் ஜாண்தங்கம் இருவரும் வழங்கினார்கள்.
 

அப்போது அங்கு இருந்த பத்மனாபபுரம் எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு ஊழியர்கள்தான் பயனாளிகளுக்கு அரசின் உதவிகளை வழங்கவேண்டும். அரசின் உதவிகளை வழங்குவதற்கு அதிமுக மா.செ.க்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது அரசு ஊழியர்களா? இது என்ன அரசு விழாவா? அல்லது அதிமுக விழாவா? எனக் கேள்வி கேட்டு எதிர்ப்பை காட்டினார்.


உடனே, அங்கிருந்த அதிமுகவினரும் மனோ தங்கராஜின் பேச்சுக்கு எதிர்ப்பைக் காட்டி சத்தம் போட்டனர். பின்னர் அங்கிருந்த திமுகவினரும் அதிமுகவினரை சத்தம் போட்டனர். இதனால்  இரு தரப்பினருக்குமிடையே ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்த சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கீழே இறங்கினார்கள். இதையடுத்து பயனாளிகளும் இருக்கையை விட்டு எழுந்தனர். இதனால் அங்கு சத்தமும் சலசலப்பும் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது.


இதைத் தொடா்ந்து அங்குவந்த தக்கலை டி.எஸ்.பி. ராமசந்திரன், இருதரப்பினரையும் சமாதானம் செய்து கடைசியில் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், வலியுறுத்தியதைப் போல் அரசு ஊழியரான சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி பயானாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். அப்போது அதிமுகவினர் ‘ஜெயலலிதா வாழ்க’ என்றும் திமுகவினர் ‘கலைஞர் வாழ்க’ என்றும் கோஷத்தை எழுப்பி கலைந்து சென்றனர். இதனால் அந்த நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்