Skip to main content

பிரதமரின் தமிழக வருகை? பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

Prime Minister attending graduation ceremony Gandhigram University

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழகத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் தனிப்பெருமை வாய்ந்தது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 50 வருடங்களாக இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களே பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவி வகித்து வந்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற 35வது பட்டமளிப்பு விழாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியன் நிசாந்த் கலந்து கொண்டு மாணவ - மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார். அதன்பின்பு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 

 

இதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குவதுடன் 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

 

Prime Minister attending graduation ceremony Gandhigram University

 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் காந்திகிராமம் அருகே ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பிரதமர் கலந்துகொள்ள உள்ள பட்டமளிப்பு விழா அரங்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பாதைகளை ஆய்வு செய்து பாதுகாப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் பிரேம்குமார், வட்டாட்சியர்கள் சரவணன், தனுஷ்கோடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், தலைமை நில அளவர் அருண்பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயலட்சுமி, ராஜலட்சுமி, விஜய்ஆனந்த் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.