Skip to main content

ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்ப்பிணிப் பெண் 12 மணி நேரம் போராட்டம்...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Pregnant woman waited 12 hours in front of the Collector's Office ...

 

 

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சவீதா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்துள்ளது. அதன்படி இவர் ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார். அப்போதுமுதல் அந்தப் பள்ளிக்கு தினசரி சென்று தனது பணியை செய்து  வந்துள்ளார். 

 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான இரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளர் பணியிடம் காலியாக இருந்ததால் அந்தப் பள்ளியின் பொறுப்பும் கூடுதலாக சவிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் ஏற்று பணியை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது சவீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே தன்னால் சிறுகன்பூர் பள்ளிக்கு சென்று வருவது சிரமமாக உள்ளது. அதனால் தற்போது கூடுதல் பொறுப்பாக பணி செய்துவரும் இரூர் பள்ளியிலேயே தனக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். 

 

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆட்சியரின் சத்துணவு நேர்முக உதவியாளர் உட்பட பல அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலமுறை நேரில் வந்தும் பணிமாறுதல் கேட்டுள்ளார். இவரை பலமுறை அதிகாரிகள் அலைக்கழிக்க வைத்துள்ளனர்.  ஆனால், பணி மாறுதல் உத்தரவு மட்டும் வழங்கவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்குமுன்பு மனம் நொந்த சவீதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். 

 

அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனை வந்து சந்திக்குமாறு கூறி அனுப்பி உள்ளனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனை சந்திப்பதற்காக வந்து காத்திருந்தார். அங்கிருந்து அலுவலர்களிடம் தன்னை மாவட்ட வருவாய் அதிகாரி வந்து சந்திக்குமாறு அழைத்து இருந்தனர். அவரை நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கொஞ்ச நேரம் பொறுத்து இருங்கள் அவரைப் பார்க்க அழைக்கிறோம் என்று அங்கிருந்த அலுவலர்கள் கூறியுள்ளனர். ஆனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சவீதாவை சந்திக்க அழைக்காமல் அலுவலகத்தை பூட்டிவிட்டு அனைவரும் புறப்பட்டு சென்றுவிட்டனர். 

 

வேதனை அடைந்த கர்ப்பிணிப் பெண்ணான சவீதா, இரவு 10 மணி வரை  அதிகாரி அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் அதிகாரி அலுவலக வாசலில் தனியாக அமர்ந்து தர்ணா போராட்டம் செய்யும் தகவல் பரவியது. இதையடுத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சவீதாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறி கதறி அழுதுள்ளார் சவீதா. விரைவில் பணி மாறுதல் வழங்குவதாக அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” - அருண் நேரு உறுதி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"I will act as your house son" - Arun Nehru assured

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ்க முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு பேசுகையில், “லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.க.வில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேடையில் நானும் ஒரு நாள் மைக் முன்னாள் நிற்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

"I will act as your house son" - Arun Nehru assured

அதனைவிட முக்கியமாக தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக எனக்கு வாக்கு கேட்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமையாக இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் என் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ அதனை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகம் பொற்கால ஆட்சியை கண்டிருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம். இந்தியாவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை அண்ணாந்து பார்க்கிறது. இத்தகைய தலைவரால் அடையாளம் கட்டப்பட்ட வேட்பாளராக இங்கு பெருமையாக நிற்கிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்தியில் அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி மூலமாக பெற்று தருவேன். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.