Skip to main content

கர்ப்பிணி பெண் தற்கொலை; கணவர், மாமனார் கைது

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Pregnant woman passed away Husband and father in law arrested

 

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் தொப்பளான். இவரது மகன் புருஷோத்தமன்(23). இவருக்கும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் நகர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் ஐஸ்வர்யா(22) இருவரும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் ஐஸ்வர்யா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

 

இவரது கணவர் புருஷோத்தமன் சுப துக்க காரியங்களில் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருவதாகவும் அந்த வகையில் நிகழ்ச்சிக்குச் செல்லும் போது வேறு பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஐஸ்வர்யா கணவரிடம் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார். இதை மனதில் வைத்து கணவர் புருஷோத்தமன், மாமனார் பழனிவேல் இருவரும் பெற்றோர் வீட்டுக்குச் சென்று கூடுதலாக வரதட்சணையாகப் பணம், நகை வாங்கி வரும்படி ஐஸ்வர்யாவை அவ்வப்போது கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி, மாமனார் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து தீபாவளி அன்று வெளியூருக்குச் சென்ற புருஷோத்தமன் இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். தீபாவளி அன்று கூட வீட்டிற்கு இவ்வளவு நேரம் கழித்து வரலாமா என்று கணவரை ஐஸ்வர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு  கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். பிறகு அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரின் வயிற்றில் வளர்ந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது. 

 

இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் தாயார் அம்சவள்ளி தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிக் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஐஸ்வர்யாவின் கணவர் புருஷோத்தமன், அவரது தந்தை பழனிவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளார். மேலும், வரதட்சணை கொடுமை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்தி அவரது இறப்புக்குக் காரணமான கணவர் மற்றும் மாமனாரின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.