ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராமஊராட்சிகளைசேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும்வீராங்கனைகளுக்குகலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரண தொகுப்புகள் மற்றும்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர்19.15 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 28கட்டிடங்களைத்திறந்து வைத்தார். தொடர்ந்து, 19.21 கோடி மதிப்பீட்டில்புதியதாககட்ட உள்ள 13 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு பல்வேறுஅரசுத்துறைகளில் சார்பில் சுமார் 38 கோடி மதிப்பிலானநலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்பு பேசி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் இன்று முதல்வர் தூய்மை பணியாளர்களுக்கான வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்திலும் 239 தூய்மை பணியாளர்களுக்கு 700 பாதுகாப்பு உபகரணம் வழங்கியுள்ளோம். 7000 பேருக்கு ரூ.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம் வழங்கியுள்ளோம். துணைமுதல்வராகபொறுப்பேற்று முதல் முறையாக ராணிப்பேட்டைக்கு உங்கள்வாழ்த்துக்களைபெற வந்துள்ளேன்.
தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான்ஃபெஞ்சல்புயல் காரணமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் என்னால் மகிழ்ச்சியாக கலந்துகொள்ள முடிகிறது. திமுக அரசுபொறுப்பேற்றதில் இருந்துஇதுவரை மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிருக்கு அரணாகப் பாதுகாப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார்.இம்மாவட்டத்தில்700 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க உள்ளோம்.
3 1/2 ஆண்டில் 580 கோடிமகளிர்இலவச பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.மகளிரின்வெற்றியே எங்கள் லட்சியம். எல்லோருக்கும் எல்லா என்பது தான் திராவிடமாடல். மக்களோடு மக்களாக கைகோர்த்து இருக்கும் அரசு தான் திராவிடமாடல்அரசு” என்று பேசினார்.
முன்னதாக ராணிப்பேட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென சென்று மாணவிகளை சந்தித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கி.பி 7 ம் நூற்றாண்டின் பல்லவர்கால மகேந்திரவாடி குடை வரைக் கோவில் சிற்பத்தைநினைவுப்பரிசாக வழங்கினார்.